"சுஜித்தின் மரணம் வேதனை அளிக்கிறது" - நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித்தின் மரணத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Rajinikanth condolences to Sujith's parents on his demise

திருச்சி, மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் கடந்த அக்.25ம் தேதி மாலை 5:40 மணியளவில் 2 வயது சிறுவன் சுர்ஜித் வில்சன் தவறி விழுந்தார். சிறுவனை மீட்கும் பணி கடந்த 4 நாட்களாக தீவிரமாக முயற்சிக்கப்பட்ட நிலையில், குழந்தை இறந்துவிட்டதாக நேற்று இரவு அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆழ்துளைக் கிணற்றில் இருந்து அழுகிய நிலையில், மீட்கப்பட்ட குழந்தையின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அவரது பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சிறுவனை மீட்கும் தொடர் போராட்டம் தோல்வியடைந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

அமைச்சர்கள், அதிகாரிகள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் சிறுவன் சுஜித்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ஆழ்ந்த வருத்ததினை தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில், “சுஜீத்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது, அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும். சுஜீத்தின் பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று தெரிவித்துள்ளார்.