தூய்மை பணியாளர்களுக்கு நிதியுதவி செய்தார் ராகவா லாரன்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா பிரச்சனையால் உலகமே அச்சுறுத்தலில் முடங்கிக் கிடக்க, வெகு சிலர் தங்களின் துரித நடவடிக்கையால் அடுத்தவர் துயர் துடைத்து வருகிறார்கள்.

raghava lawrence deposited 750 to each frontline workers account

அவ்வகையில், தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணத் தொகையை அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

கொரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ.3 கோடியை வழங்குவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் ராகவா லாரன்ஸ். 

தற்போது 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க ராகவா லாரன்ஸ் கமிட் ஆகியுள்ளார். அந்தப் படத்தில் அவர் பெறவிருக்கும் சம்பளத்திலிருந்து ரூ.25 லட்சத்தை தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப் போவதாக கடந்த ஏப்ரல் மாதமே அறிவித்திருந்தார்.

சொன்ன சொல் தவறாமல், தற்போது 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் கதிரேசன் மூலம்  3,385 தூய்மைப் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.750/- அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். இந்தத் தகவலை தெரிவித்து அவர்களுக்கு நன்றி கூறி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

raghava lawrence deposited 750 to each frontline workers account

People looking for online information on Corona Virus, Covid 19, Frontline workers, Raghava Lawrence will find this news story useful.