சிறுவனின் அன்பால் நெகிழ்ந்து போன லாரன்ஸ்..! - இதை பார்த்துவிட்டு என்ன சொன்னார் தெரியுமா.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். 

சிறுவனின் அன்பால் நெகிழ்ந்த லாரன்ஸ் | actor raghava lawrence posts on twitter about a small boy's love for him

தமிழ் சினிமாவில் நடிகராக இயக்குநராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கிய காஞ்சனா சீரிஸ் படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றும் ஆல் டைம் ஹிட் அடித்து வருகிறது. மேலும் இவர் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுமட்டுமின்றி, சமூக நலத்திட்ட உதவிகள் செய்வதிலும் லாரன்ஸ் அதிகளவில் ஈடுபாடு காட்டி வருகிறார். 

இந்நிலையில் லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்துள்ளார். சாலையில் இருக்கும் அவரது போட்டோவுக்கு சிறுவன் ஒருவன் அன்புடன் முத்தம் கொடுக்கும் போட்டோ இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த போட்டோவை பகிர்ந்த லாரன்ஸ், ''இந்த போட்டோவை சமூக வலைதளங்களில் பார்த்தேன். குழந்தைகளை தெய்வம் என்று சொல்வார்கள். நான் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல்தான் உதவி செய்து வருகிறேன். இந்த போட்டோவை பார்க்கும் போது, எனக்கு ஒரு அவார்ட் கிடைத்தது போல இருக்கிறது. இது என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது. இந்த சிறுவனை நான் பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இதுகுறித்து யாருக்காவது தெரிந்தால், 877 - 8338209 என்று எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்'' என தெரிவித்துள்ளார். 

 

Entertainment sub editor