Happy News! நடிகர் ராகவா லாரன்ஸ் டிரஸ்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலமடைந்தனர்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமூக சேவைகளுக்கு பெயர் போனவர் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் கொரோனா ஆரம்பித்த காலத்திலிருந்தே மிகப்பெரிய உதவிகளை சமுதாயத்திற்கு செய்து வருகிறார். சமீபத்தில் அவரது டிரஸ்டில் இருக்கும் 18 குழந்தைகளுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இது அனைவரிடமும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் நிலைமை என்ன என்று பலரும் எதிர்பார்த்திருந்த வேளையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.

லாரன்ஸ் டிரஸ்டில் Corona பாதித்த குழந்தைகள் நலம் Children affected with corona virus in Raghava Lawrence trust gets cured

அதில் "நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை பகிர விரும்புகிறேன்.எனது குழந்தைகள் ட்ரீட்மெண்ட் முடிந்து பத்திரமாக டிரஸ்டுக்கு திரும்பியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் என்று முடிவுகள் வெளியாகியுள்ளது" என்று கூறிய அவர், அரசு அதிகாரிகளுக்கும், மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் கூறிய அவர் "எனது சமூக சேவைதான், எனது குழந்தைகளை காப்பாற்றியுள்ளது. குழந்தைகளுக்காக வேண்டுதல் செய்த அனைவருக்கும் நன்றி" என்று கூறியுள்ளார். இந்த பதிவு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

லாரன்ஸ் டிரஸ்டில் Corona பாதித்த குழந்தைகள் நலம் Children affected with corona virus in Raghava Lawrence trust gets cured

People looking for online information on Children, Corona, Raghava Lawrence will find this news story useful.