www.garudabazaar.com

சின்னக் குழந்தையாகவே மாறி அழுதுவிட்ட பிரியங்கா! கலங்கிய ஹவுஸ்மேட்ஸ்! BiggBoss-ல் நெகிழ்ச்சி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா தன் அம்மாவை பார்த்ததும் உருகி அழுத காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

priyanka cries when her mother enters biggboss house

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட 78 நாட்கள் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளர்களாக இப்போது இருக்கும் 10 பேர் உருவெடுத்து இருக்கின்றனர். காரணம் இந்த பத்து போட்டியாளர்களை கொண்டுதான் இந்த நிகழ்ச்சி தம்முடைய இறுதிக் கட்டத்தை எட்ட போகிறது.

ஃபினாலே ரேஸ்:

முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே என்பது தொடங்கப் பட்டு விட்டதாகவும், அதற்காக போட்டியாளர்களை தானே நாமினேட் செய்வதாகவும் கடந்த வாரங்களில் பிக்பாஸ் அறிவித்திருந்தார். இதற்கு முன்புவரை பிக்பாஸ் நிகழ்ச்சி 4 சீசன்கள் நடந்திருக்கிறது.

இந்த 4 சீசன்களுமே சராசரியாக சுமார் 98 நாட்கள் தொடங்கி கிட்டத்தட்ட 106 நாட்கள் நடைபெற்றுள்ளன. இந்த சீசனும் 106 நாட்கள் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த 5வது சீசனில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்பது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

மற்ற போட்டியாளர்களின் உறவினர், நெருங்கியவர்கள் வருகை:

அண்மை காலமாகவே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் ஒவ்வொருவராக பிக்பாஸ் வீட்டுக்குள் வர தொடங்கினர். அந்த வகையில் நிரூப்பின் தந்தை, அக்‌ஷராவின் அண்ணன் மற்றும் அம்மா வருகை தந்தனர். இதேபோல் ராஜூவின் அம்மா மற்றும் மனைவி வருகை தந்தனர்.

சிபியின் மனைவியும் அதற்கு முன்னர் வருகை தந்தார். இவர்களைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டின் முன்னாள் போட்டியாளரும் நிரூப்பின் முன்னாள் காதலியுமான யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் வீட்டுக்கு வருகை தந்தார்.

எனினும் அவர் போட்டியாளர்களுடன் நேரடி தொடர்பு வைத்துக் கொள்ளாமல், கண்ணாடி பெட்டகத்தில் நின்றபடி அனைவரிடமும் பேசி விட்டுச் சென்றார். இந்த நிலையில்தான் பிக்பாஸ் வீட்டுக்குள் பிரியங்காவின் அம்மா வருகை தந்திருக்கிறார்

பிரியங்காவின் அம்மா எண்ட்ரி:

முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவருக்கும் பிடித்தமான ஒரு முக்கியமான டாஸ்க் மீண்டும் அரங்கேறியது. அதுதான் பிக்பாஸ் ஃப்ரீஸ் என்று சொன்னால் அனைவரும் அசையாமல் உறைந்து நிற்கும் டாஸ்க். அப்படி அனைவரையும் கண்களை மூடி பிக்பாஸ் தூங்க சொல்ல, அப்போது பிக்பாஸ் வீட்டில் பிரியங்காவின் அம்மா என்ட்ரி கொடுத்தார்.

அவரை பார்த்ததும் பிரியங்கா கண் கலங்கி, அழுது, ஓடி, சிரித்து, மகிழ்ந்து அம்மா என்று அவரை ஆரத்தழுவி கொண்டார். இதை பார்த்து அனைவருமே கிட்டத்தட்ட கண் கலங்கி விட்டனர். பிக்பாஸ் வீட்டில் பிரியங்கா சிரிப்பும் அழுகையும் கோபமும் ஆற்றாமையும் ஆக்ரோஷமும் என பலவிதமான தமது உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார். அவருடைய ஒவ்வொரு உணர்வுமே அதனுடையே உச்சகட்ட வெளிப்பாடாக இருக்கும்.

அப்படித்தான் இந்த முறை தன் அம்மாவை கண்டபோதும் பிரியங்கா சின்னக் குழந்தை போல் அழுவதை பார்த்து அனைவருமே கண் கலங்கி போய் இருக்கின்றனர். அம்மாவை பார்த்த சந்தோஷத்தில் பிரியங்கா இருந்து கரைந்து உருகி போவதை பிக்பாஸ் எபிசோடில் காண முடியும்.

தொடர்புடைய இணைப்புகள்

priyanka cries when her mother enters biggboss house

People looking for online information on Biggboss tamil 5, BiggBoss5, Biggboss5 tamil, Priyanka amma, Priyanka cries mother, Priyanka mother biggboss entry, Priyanka mother enters biggboss, Trending, Vijay televsion, Vijay tv, VJ Priyanka will find this news story useful.