பிரபல பாடகி தற்கொலை.... கணவர் தலைமறைவு - அதிர்ச்சி தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கன்னட திரையுலகில் பிபல பாடகியாக விளங்கியவர் சுஷ்மிதா. இவர் நேற்று (பிப்ரவரி 17) தனது அம்மா வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அவரது தற்கொலை குறித்து காவல்துறையினர் சுஷ்மிதாவின் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளனராம்

Popular Kannada Singer Sushmitha Commits Suicide

மேலும் சுஷ்மிதா தற்கொலை கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளாராம். அதில் கணவர் மற்றும் கணவர் வீட்டாரும் தற்கொலைக்கு காரணமாக தற்கொலை கடிதம் எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. வரதட்சனை கேட்டு அவர்கள் துன்புறுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

சுஷ்மிதாவிற்கும் அவரது கணவர் சரத் குமாருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் சுஷ்மிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அறிந்து அவரது  கணவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவரை போலீஸார் தேடி வருகின்றனராம்.

Entertainment sub editor