www.garudabazaar.com

மயில்சாமி வீட்டு வாசலில் உள்ள வாசகம்.. "அதுல இருந்தது மாதிரியே வாழ்ந்துட்டு போய்ட்டாரு"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

57 வயதான நடிகர் மயில்சாமி, பல  தமிழ்ப் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர்.

Mayilsamy house quotes in entrance broke down people

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "நண்பர் நட்டி, இயக்குனர் செல்வராகவனுக்கு".. பகாசூரன் படத்தை பாராட்டிய அனுராக் காஷ்யப்!!

1984-ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில்   நடித்து வந்த நடிகர் மயில்சாமி, கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், ரஜினிகாந்த் நடித்த பணக்காரன் உள்ளிட்ட  படங்களில் நடித்ததன் மூலம் அறியப்பட்டவர்.  2000- காலகட்டத்தில்  நடிகர் விவேக் & வடிவேலு ஆகியோருடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்ததன் மூலம் மயில்சாமி பிரபலமானார்.

தவிர, காமெடி டைம், டைமுக்கு காமெடி உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடிகர் மயில்சாமி தொகுத்து வழங்கியுள்ளார்.

Mayilsamy house quotes in entrance broke down people

Images are subject to © copyright to their respective owners.

சென்னை சாலிகிராமத்தில் நேற்று அதிகாலை மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார் .  நடிகர் மயில்சாமி உடலுக்கு நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, பார்த்திபன், எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

மயில்சாமியின் மறைவு, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரையும் மீளாத் துயரிலும் ஆழ்த்தியுள்ளது.

Mayilsamy house quotes in entrance broke down people

தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்த மயில்சாமி, கொரோனா உள்ளிட்ட பேரிடர் காலங்களிலும், மக்கள் கஷ்டப்பட்டு தன்னிடம் உதவி என வரும் போதும், தனது பார்வையில் வறுமை என தெரியும் போது எந்த பலனும் எதிர்பார்க்காமல் உதவி செய்தவர் மயில்சாமி. தான் வறுமையில் இருந்தாலும் கையில் இருப்பதை மற்றவர்களுக்கு கொடுக்கவும் அவர் தவறியதில்லை. மேலும், நடிகர் மயில்சாமி காரணமாக ஏராளமானோர் பயன்பெறவும் செய்துள்ளனர்.

Mayilsamy house quotes in entrance broke down people

இது பற்றி, பல பிரபலங்கள் கூட தற்போது உருக்கத்துடன் மனம் திறந்து வருகின்றனர். அப்படி இருக்கையில் தனது வீட்டின் முன்பு மயில்சாமி குறிப்பிட்டு வைத்துள்ள வாசகம் தொடர்பான செய்தி தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. அவரது வீட்டின் வாசலின் ஒரு பக்கம் "அன்பே கடவுள் இல்லம்" என்ற வாசகமும், இன்னொரு பக்கம் அவரது வீட்டு எண்ணுடன் "நல்லவன் வாழ்வான்" என்றும் குறிப்பிட்டுள்ளார். தான் வாழ்வில் செய்ததையே வீட்டில் உள்ள முன்பக்கமும் வாசகமாக குறிப்பிட்டு வைத்துள்ள மயில்சாமியை இன்னும் உருக்கத்துடன் பலரும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

Also Read | "நம்ம வாழுற காலத்துல இப்டி ஒருத்தன்".. மயில்சாமி பற்றி விவேக்.. கண்கலங்க வைக்கும் Throwback வீடியோ!!

மயில்சாமி வீட்டு வாசலில் உள்ள வாசகம்.. "அதுல இருந்தது மாதிரியே வாழ்ந்துட்டு போய்ட்டாரு" வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Mayilsamy house quotes in entrance broke down people

People looking for online information on Mayilsamy, Mayilsamy house quotes will find this news story useful.