"எனக்கு அம்மா மட்டும் தானடா".... இந்திய அளவில் டிரெண்டிங்கில் வந்த கேபி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் போட்டியாளர்கள் நூறு நாட்களுக்கு மேல் கடந்து தங்களது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளனர். இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பைனல்ஸ் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒவ்வொரு முறையும் பிக்பாஸின் கடைசி வாரத்தில் வெளியேறிய போட்டியாளர்கள் இறுதி போட்டியாளர்களை சந்திப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் ரேகா, அர்ச்சனா, ரமேஷ், அனிதா, சனம், வேல்முருகன் போன்ற போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

Gaby in indian level trending இந்திய அளவில் டிரெண்டிங்கில் கேபி

ஒவ்வொரு சீசனின் கடைசியிலும் ஒரு அதிரடி திருப்பத்தை போட்டியாளர்கள் முன் வைப்பது பிக்பாஸின்  வழக்கம். அதாவது தனக்கு முதல் இடம் கிடைக்காது என்று நினைக்கும் போட்டியாளர்கள் பிக்பாஸ் கொடுக்கும் ஐந்து லட்சத்தை பெற்றுக்கொண்டு இறுதிப்போட்டிக்கு முன்பதாகவே வீடு திரும்பலாம். கடந்த சீசனில் கவின் அப்படி  சமயோஜிதமாக யோசித்து அந்த ஐந்து லட்சத்தை பெற்றுக்கொண்டு வீடு திரும்பினார். இந்நிலையில் இந்த சீசனில் யார் அப்படி வெளியேறுவார்கள் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்தனர். நமக்கு கிடைத்திருக்கும் உறுதியான தகவலின் அடிப்படையில் கேபி 5 லட்சத்தை பெற்றுக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் இன்று வெளியான மூன்றாவது புரோமோவில் கேபி அந்த பெட்டியை எடுக்க ரியோ தடுக்கிறார். அதற்கு கேபி "எனக்கு அம்மா மட்டும் தானடா" என்று கூறுகிறார். இந்நிலையில் இந்த நெகிழ்ச்சியான வார்த்தைகளை ரசிகர்கள் டிவிட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர். தற்போது கேபி இந்த அளவில் டிரெண்டில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

"எனக்கு அம்மா மட்டும் தானடா".... இந்திய அளவில் டிரெண்டிங்கில் வந்த கேபி..! வீடியோ

Gaby in indian level trending இந்திய அளவில் டிரெண்டிங்கில் கேபி

People looking for online information on Biggboss4tamil, Gaby will find this news story useful.