மீண்டும் தியேட்டரில் வெளியானது பிரபல ஹீரோவின் ரொமான்டிக் காமெடி படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் பாதித்தோரின் எண்ணிக்கை நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது நான்காவது முறையாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் சில செயல்பாடுகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், திரையரங்குகள், வணிக வளாகங்களுக்கு இன்னும் அனுமதியளிக்கப்படவில்லை.

இந்நிலையில் துபாயில் இன்று திரையரங்குகள் இன்று முதல் ( 27/05/2020) திறக்கப்பட்டு, மாஸ்க் அணிவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அங்கு இந்தியர்கள் அதிகம் வசிப்பதால் இந்திய படங்கள் இங்கு வெளியாவது போல் நேரடியாக துபாயிலும் வெளியாவது வழக்கம்.

தற்போது துபாயில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் துல்கர் சல்மான், கௌதம் மேனன், ரிது வர்மா, ரக்ஷன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஃபிப்ரவரி மாதம் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இன்று முதல் துபாய் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த துபாயில் வசிக்கும் தமிழ் ரசிகர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சிகரமான செய்தியாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

Dulquer Salmaan and Gautham Menon's Kannuum Kannum Kollaiyadithaal rerelease at Dubai | கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் துபாயில் இன்று முதல் வெளி�

People looking for online information on Dulquer salmaan, Gautham Menon, Kannum Kannum Kollaiyadithaal will find this news story useful.