''தகாத வார்த்தைகளால் பேசுவதால்...'' - கவின் - லாஸ்லியா குறித்து சேரன் கருத்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் சேரன் முதன்மை வேடத்தில் நடித்து உருவாகியிருக்கும் படம் 'ராஜாவுக்கு செக்'. இந்த படத்தை பல்லட்டே கொக்கட் ஃபிலிம் ஹவுஸ் நிறுவனம் தயாரிக்க இந்த படத்தை சாய் ராஜ் குமார் தயாரித்துள்ளார்.

Director Cheran speaks about Kavin, Losliya and Bigg Boss 3

இந்த படத்தில் சேரனுடன் இர்ஃபான், ஸ்ருஷ்டி டாங்கே, நந்தனா வர்மா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்ய, வினோத் எஜமான்யா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவுடன் இவரது அப்பா - மகள் உறவு சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையிலும் அது தொடர்கிறது. இந்நிலையில் இதுகுறித்து சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''தகாத வார்த்தைகளால் பேசுவதால் பிரச்சனை தீராது.. இதை வளர்த்து நான் பெரியாளாக விரும்பவில்லை.

நான் எவ்வளவோ பேசி பழக முயன்றும் என்னோடு கவின் பேச விரும்பவில்லை புறக்கணித்தார் என்பதே உண்மை. நீங்களும் பார்த்திருப்பீர்கள்.இருந்தும் ப்ரச்னை பெரிதாகாமல் இருக்க அவருக்கு எடுத்துச்சொன்னேன்.

கவின் லாஸ்லியா விசயத்தில் அவர்கள் முடிவுக்கோ வாழ்வுக்கோ நான் குறுக்கே நிற்க போவதில்லை. அவசியமுமில்லை.

இனியொரு முறை என் நாவில் இருவர் பெயரும் வராது. இத்தோடு நீங்கள் அனைவரும் நாகரீகம் கருதி நிறுத்திக்கொண்டால் நல்லது.

என் பிரச்சனைக்கு வரவேண்டாம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.