www.garudabazaar.com

"பாக்கியா சாப்பாடு குடுத்த நேரத்துல.. இன்னொரு விஷயமும் நடந்துருக்கு.." police station- ல பரபர ட்விஸ்ட்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாக்கியலட்சுமி தொடரில், சமீபத்தில் முதன்மை கதாபாத்திரமான பாக்கியாவை போலீசார் கைது செய்து அழைத்து சென்றது, ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

baakiyalakshmi ezhil saved his mother from police

Also Read | SK20 பட தயாரிப்பாளர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்.. சிவகார்த்திகேயனின் உருக்கமான Post

பாக்கியாவுடனான உறவை முறித்து விட்டு, அடுத்ததாக ராதிகாவை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார் கோபி.

இதற்காக இருவர் மத்தியிலும், கோபி போட்டு வரும் நாடகங்கள் அவர் எப்போது சிக்குவார் என்ற காத்திருப்பை தான் ரசிகர்கள் மத்தியில் உருவாக்கி உள்ளது.

உணவால் வந்த குழப்பம்

இதனிடையே தான், ஒரு காரணத்திற்காக பாக்கியா போலீசாரிடம் சிக்கி விடுகிறார். ராதிகாவின் மகளான மயூராவின் பிறந்தநாளை முன்னிட்டு, குழந்தைகள் இல்லம் ஒன்றில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், உணவு தயார் செய்து வழங்கும் பொறுப்பினை, பாக்கியாவிடம் ஒப்படைத்திருந்தார் ராதிகா.

கோபியும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்பதால், பாக்கியாவும் அங்கு வரவிருப்பதை அறிந்த அவர், தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வேலையை பாக்கியாவிடம் கொடுத்து விடுகிறார். இதனால், கோபியும் தப்பித்துக் கொள்ள, அப்போது தான் ராதிகா பாக்கியா வீட்டிற்கு செல்ல வேண்டும் என கோபியிடம் கூறுகிறார்.

baakiyalakshmi ezhil saved his mother from police

மயங்கி விழுந்த குழந்தைகள்

அப்படி ஒரு சூழ்நிலையில் தான், உணவு கொடுத்த குழந்தைகள் காப்பகத்தில் இருந்து ராதிகாவுக்கு ஒரு போன் வருகிறது. அப்போது, உணவை உண்ட குழந்தைகள் அனைவரும் மயங்கி விழுந்ததாக தெரியவர ராதிகா மற்றும் கோபி ஆகியோர் அதிர்ச்சி அடைகின்றனர். இது பற்றி விவரமறிந்து அங்கு வரும் போலீசார், உணவு தயார் செய்தது யார் என விசாரிக்கவே, பாக்கியா பற்றிய விவரத்தினை ராதிகா தெரிவிக்கிறார்.

baakiyalakshmi ezhil saved his mother from police

தாயைக் காப்பாற்றும் முயற்சியில் எழில்

தொடர்ந்து, பாக்கியா வீட்டிற்கு சென்ற போலீஸ், அவரை கைது செய்து அழைத்துச் செல்கிறது. இதனால், அவரது குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடையவே, எப்படி அவரை காப்பாற்றுவது எனவும் அவர்கள் குழம்பி போயினர். தொடர்ந்து, தாயை மீட்கும் நடவடிக்கையில் எழில் இறங்குகிறார். குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று, அங்குள்ள உணவினை எடுத்து சோதனை செய்து பார்க்கிறார்.

baakiyalakshmi ezhil saved his mother from police

அப்போது தான், பாக்கியா தயாரித்த உணவில் பிரச்சனை இல்லை என்பதும், லட்டு தான் கெட்டு போயிருக்கிறது என்பதும் தெரிய வருகிறது. ஆனால், லட்டினை பாக்கியா வழங்கவில்லை என்பது எழிலுக்கு தெரிய வந்ததும், உடனடியாக போலீசாரிடம் சென்று ஆதரங்களை காட்டி, நடந்ததை விளக்குகிறார். பின்னர், நீதிமன்றத்திடம் ஆதாரங்களை  அவர் சமர்பிக்கவே, அவர்களும் பாக்கியாவை நிரபராதி என தீர்ப்பு வழங்கி விடுதலை செய்கிறது.

baakiyalakshmi ezhil saved his mother from police

மகன்களின் பாசத்தால் ஆனந்த கண்ணீர் விடும் பாக்கியாவை காணும் ரசிகர்களும் ஒரு நிமிடம் உருகி போயினர். ராதிகாவுடன் சேர்ந்து பாக்கியாவை சந்திக்காமல் இருக்க வேண்டி, கோபியே கெட்டு போன லட்டினை கொடுத்திருக்கலாம் என்றும் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

Also Read | “தமிழணங்கு”… “பெருமைமிகு தமிழன்”… - ஒரே post-ல் தெறிக்கவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான் & யுவன்

தொடர்புடைய இணைப்புகள்

baakiyalakshmi ezhil saved his mother from police

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi serial, Baakiyalakshmi Serial Episode, Ezhil, Vijay Television will find this news story useful.