www.garudabazaar.com

"Divorce'-னா ஈஸியா?.." ஓங்கி ஒரே அறை.. பத்ரகாளியான பாக்கியா.. பேயறைஞ்ச மாதிரி நின்ன கோபி..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீப காலமாக, சீரியல் ரசிகர்கள் அதிகம் முணுமுணுக்கும் ஒரு தொடர் என்றால் அது நிச்சயம் 'பாக்கியலட்சுமி' தொடராக தான் இருக்கும்.

baakiyalakshmi gopi reaction after baakiya beats her son

இதற்கு மிக மிக முக்கிய காரணம், பாக்கியலட்சுமியின் கணவனாக வரும் கோபி செய்யும் தில்லாலங்கடி வேலைகள் தான்.

பாக்கியலட்சுமி மாதிரி ஒரு அப்பாவியான, அதே வேளையில் மிகவும் அன்புடன் தனது குடும்பத்தினரை பார்த்து கொள்ளும் மனைவியை விவாகரத்து செய்யத் துடியாய் துடிக்கிறார் கோபி.

கோபியின் தில்லாலங்கடி

மனைவியை விவாகரத்து செய்து விட்டு, ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்துள்ளார் கோபி. இதற்காக, மனைவியை ஏமாற்றி விவாகரத்துக்கும் கோபி தயாராகி இருந்தார். இன்னொரு பக்கம், ராதிகா மற்றும் பாக்கியலட்சுமி ஆகியோர் சிறந்த தோழிகளாக இருந்தாலும், பாக்கியலட்சுமியின் கணவர் தான் கோபி என்பது ராதிகாவுக்கும், ராதிகா திருமணம் செய்ய போவது தன்னுடைய கணவர் தான் என்பது பாக்கியலட்சுமிக்கும் தெரியாது.

baakiyalakshmi gopi reaction after baakiya beats her son

செம ஷாக் தான்

இப்படி ஒரு சூழ்நிலையில், கணவர் கோபி மீது பாக்கியலட்சுமிக்கு சந்தேகம் எழவும் தொடங்கியுள்ளது. இருந்தாலும், தன்னுடைய நடிப்பினால், மனைவி மற்றும் ராதிகா ஆகிய இருவரிடம் இருந்து தப்பித்துக் கொண்டே இருக்கிறார் கோபி. இந்நிலையில், புதிதாக வெளியாகியுள்ள ப்ரோமோ ஒன்று, கோபி முகத்தில் பயத்தைக் கிளப்பியுள்ளது.

செழியனின் விரக்தி

கோபி - பாக்கியலட்சுமி ஆகியோரின் மகன் செழியன் மற்றும் மருமகள் ஜெனிபர் ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால், அவர்களுக்கு இடையில் தொடர்ந்து சண்டை நிலவி வருகிறது. இருவரையும் அமர வைத்து, குடும்பத்தினர் என்ன பிரச்சனை என்பது பற்றி விசாரிக்கின்றனர்.

baakiyalakshmi gopi reaction after baakiya beats her son

ஓங்கி ஒரே அறை

அப்போது பேசும் செழியன், "ஏன் கல்யாணம் பண்ணோம்னு இருக்கு. Divorce குடுத்துடலாம்னு  தோணுது" என ஆக்ரோஷத்தில் பேசுகிறார். இதனைக் கேட்டதும் கோபத்தின் உச்சத்திற்கே சென்ற பாக்கியா, மகன் செழியனை ஓங்கி அறைகிறார். "என்னடா சொன்னே. டைவர்ஸ்னா அவ்ளோ ஈஸியா போச்சா உங்களுக்கு எல்லாம். அப்படியே வாழ்க்கையை விட்டுட்டு போலாம்ன்னு சொல்றதுக்கு எதுக்கு கல்யாணம் பண்றீங்க. நீ என்ன பண்ணாலும் அமைதியா பாத்துட்டு இருப்பேன்னு நினைக்காத. உன்ன அப்படியே தொலைச்சுருவேன். புரியுதா?" என வெடித்துச் சிதறினார் பாக்கியா.

கோபிக்கு அள்ளு விட்ருச்சு

மகன் டைவர்ஸ் என்றதற்கு மனைவி இருந்த நிலையைக் கண்டு கொண்டே இருக்கும் கோபிக்கு, தன்னிடமே பேசுவது போல தோன்றுகிறது. அது மட்டுமில்லாமல், மகனுக்கே இந்த நிலை என்றால், தன்னுடைய நிலைப்பாடு பற்றி தெரிந்தால், மனைவி பாக்கியாவின் கோபம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை நினைத்துக் கொண்டே, அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார் கோபி.

baakiyalakshmi gopi reaction after baakiya beats her son

இதனால், தன்னுடைய முடிவில் இருந்து கோபி நிலை மாறுவாரா அல்லது மனைவியை விட்டு விட்டு, ராதிகாவை அடையத் தான் வழி பார்ப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

baakiyalakshmi gopi reaction after baakiya beats her son

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi Episode, Baakiyalakshmi Promo, Baakiyalakshmi serial, Gopi, New Episode will find this news story useful.