RRR Others USA
www.garudabazaar.com

Baakiyalakshmi: "இதுக்கு ஒரு முடிவு கட்றேன்".. பாக்யாவுக்காக கோபியின் தந்தை பரபரப்பு முடிவு..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பாக்கியலட்சுமி' தொடரின் ஒவ்வொரு எபிசோடும், ப்ரோமோவும் கோபி சீக்கிரம் சிக்கப் போகிறார் என்பதைத் தான் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் ஆக்கிக் கொண்டு செல்கிறது.

gopi father decision after son cheating in baakiyalakshmi serial

மனைவி பாக்கியலட்சுமியை ஏமாற்றி விட்டு, ராதிகாவை திருமணம் செய்ய முழுவதுமாக தயாராகி உள்ளார் கோபி.

ஆனால், பாக்கியலட்சுமி மற்றும் ராதிகா ஆகிய இருவருக்கும் கோபியின் தில்லாலங்கடி வேலைகள் சுத்தமாக தெரியாது.

தெரிய வந்த உண்மை

தொடர்ந்து, தன்னுடைய திறன்பட நடிப்பால், இரண்டு பெண்களையும் ஏமாற்றிக் கொண்டே வருகிறார்கோபி. அந்த நேரத்தில் தான், கோபியின் நாடகம் குறித்து மகன் எழிலுக்கு தெரிய வருகிறது. தீம் பார்க் ஒன்றில், ராதிகா மற்றும் அவருடைய மகளுடன் கோபி வர, இன்னொரு பக்கம், கோபியின் மனைவி பாக்கியா, மகன் எழில் உள்ளிட்ட அனைவரும் வந்துள்ளனர். தாங்கள் இருக்கும் தீம் பார்க்கில் தான் தனது குடும்பத்தினரும் இருக்கிறார்கள் என்பது கோபிக்கு தெரிய வருகிறது.

அப்பாவோட மறுபக்கம் தெரிஞ்சு போச்சு..

இதன் காரணமாக, அதிர்ச்சி அடைந்த கோபி, ராதிகா மற்றும் அவருடைய மகளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்புகிறார். மூவரும் காரில் ஏறும் நேரம் பார்த்து, எதேச்சையாக அங்கு வரும் ஏழில், வேறு ஏதோ பெண்ணுடன் தந்தை காரில் ஏறிச் செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அது மட்டுமில்லாமல், வேகமாக சென்ற காரின் பின்னால், "அப்பா, அப்பா" என கத்திக் கொண்டே ஓடவும் செய்கிறார் எழில்.

தந்தையின் போக்கால், அதிர்ச்சி அடைந்த எழில், மறுநாள் தந்தையிடம் இது பற்றி கேட்டு, எச்சரிக்கவும் செய்கிறார். அதே போல, தாய் பாக்கியலட்சுமியிடமும், தந்தையின் போக்கு பற்றி மறைமுகமாக கூறி, திட்டவும் செய்கிறார் எழில்.

கதறி அழும் எழில்

இதற்கு அடுத்தபடியாக, தாத்தாவிடம் அழுது கொண்டே பேசும் எழில், "நேத்து நாம பிக்னிக் போனோம்ல. அங்க அப்பா இன்னொரு லேடியோட வந்து இருந்தாங்க. இப்படி பண்றதுனால அவரு வேணவே வேணாம்ன்னு தோணுது தாத்தா" எனக்கூறிய படி, தாத்தாவை கட்டிப் பிடித்து கொண்டே எழில் அழுது கொண்டு இருக்கிறார்.

முடிவு கட்டத் துடிக்கும் தந்தை

மகன் கோபியின் வேலையால் குடும்பத்தினர் படும் அவஸ்தையைக் காணும் தந்தை, இதுக்கு ஒரு  முடிவு கட்டி விட தீர்மானிக்கிறார். ராதிகா மற்றும் பாக்கியலட்சுமி நெருங்கிய தோழிகள் என்ற போதும், பாக்கியலட்சுமியின் கணவர் தான் கோபி என்பது ராதிகாவுக்கும், ராதிகா அடுத்து திருமணம் செய்ய போவது தன்னுடைய கணவரைத் தான் என்பது பாக்கியலட்சுமிக்கும் தெரியாது.

இது தான் ஒரே வழி

இதனால், கோபி மற்றும் பாக்கியலட்சுமி ஆகியோர் இருக்கும் புகைப்படத்தை ராதிகாவிடம் காட்டி விட்டால், மகனின் வண்டவாளங்கள் அனைத்தும் வெளியே வந்து விடும் என முடிவு செய்து, அந்த புகைப்படத்தைக் கொண்டு சாலையில், தன்னால் முடியாத போதும் வேகமாக நடந்து செல்கிறார் கோபியின் தந்தை.

இது தொடர்பான ப்ரோமோக்கள், தற்போது பாக்கியலட்சுமி தொடரின் மீதான விறுவிறுப்பை இன்னும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

gopi father decision after son cheating in baakiyalakshmi serial

People looking for online information on Baakiya, Baakiyalakshmi, Baakiyalakshmi Promo, Cheating, Gopi, Marriage, Radhika will find this news story useful.