www.garudabazaar.com

கரிச்சு கொட்டிய ஈஸ்வரி.. ஒரே ஒரு செக்.. கோபி மூஞ்சில கரிய பூசிய பாக்யா.! baakiyalakshmi

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் பாக்கியலட்சுமி. சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் இந்த சீரியலில் அண்மையில் தான் எழிலுக்கும் அமிர்தாவுக்கும் திருமணம் ஆனது.

baakiya starts to settle gopi money baakiyalakshmi promo

Also Read | இந்த சீசன்லயும் பையை தூக்கிக்கொண்டு புறப்பட்ட கண்ணம்மா..!! என்ன ஆச்சு? Bharathi Kannamma 2

ஆனால் தந்தை கோபியுடன் போட்ட சண்டையால், கோபி தன் வீட்டை திரும்ப கேட்க, இதனால் பாக்யாவின் மீது பாக்யா மற்றும் எழில், அமிர்தா மீது மாமியார் ஈஸ்வரியும், மூத்த மகனும் செழியனும் கடும் கோபத்தில் உள்ளனர். முன்னதாக வர்ஷினியை எழிலுக்கு திருமணம் செய்தால் கோபியின் வீட்டை வாங்க பணம் கிடைக்கும் என்கிற ஈஸ்வரியின் கணக்கு உடைந்ததுதான் இதற்கு காரணம்.

இந்நிலையில் பாக்கியா, அமிர்தாவின் உதவியுடன் செல்வி உள்ளிட்டோரின் துணையுடன் அடுத்தடுத்து இடைவிடாது தனக்கு வந்த கேட்டரிங் ஆர்டர்களை பெரும் எதிர்ப்பு, சவால்களுக்கு மத்தியில் வெற்றிகரமாக செய்துமுடித்தார்.

baakiya starts to settle gopi money baakiyalakshmi promo

இதனிடையே வீட்டில் செழியனுக்கும் ஈஸ்வரி பாட்டிக்கும் டீ போட்டு கொடுத்த அமிர்தா ஈஸ்வரி பாட்டியால் அவமானப்படுத்தப் படுகிறார். ஆனாலும் செழியின் டீ குடித்துவிட, அமிர்தா பாஸ் ஆகிறார்.

baakiya starts to settle gopi money baakiyalakshmi promo

இதேபோல் அமிர்தாவின் குழந்தை நிலாவை அவ்வப்போது பார்த்துக்கொள்ளும் ஜெனி, அந்த குழந்தையை வைத்து செழியனை பெரியப்பா என அழைக்கச் சொல்வதும் வம்பிழுப்பதுமாக இருக்க, செழியனும் கொஞ்சம் கொஞ்சமாக கல் மனதை கரையவிடுவதாக தெரிகிறது.

baakiya starts to settle gopi money baakiyalakshmi promo

இந்நிலையில் தான், கேட்டரிங் பணி முடிந்து பணம் சம்பாதித்த பாக்யா,  தன்னுடன் பணிபுரிந்தவர்களுக்கு சம்பளம் கொடுத்தது போக மீதி உள்ளதை தன் மருமகள்கள் மூலம் கணக்கு பார்த்துவிட்டு, ஏதோ யோசனை வந்தவராய்,  ஜெனியிடம் சொல்லி, கோபியை போன் போட்டு வீட்டுக்கு வருமாறு சொல்லச்சொல்கிறாள். அப்போது ஜெனி கோபிக்கு போன் போட்டு வீட்டுக்கு வர சொல்கிறார்.

baakiya starts to settle gopi money baakiyalakshmi promo

இதேபோல் தன்னுடைய செக் புக் எங்கே என கேட்க ஜெனி எடுத்து தர, அதில் கோபிக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை எழுதி கோபி வீட்டுக்கு வந்ததும் செக்கை கொடுக்கிறார். மீதி பணத்தை அடுத்தடுத்து தருவதாகவும் சவாலாகா பேச, கோபி முகம் மட்டுமல்ல, ஈஸ்வரியின் முகமும் வெளறி போய்விடுகிறது. பாக்யாவின் ஆட்டம் களைகட்டியுள்ளது.!

Also Read | Vadakkan : ‘வடக்கன்’ படம் மூலம் இயக்குநராகும் பிரபல சீரியல்கள் & திரைப்பட எழுத்தாளர்..!

தொடர்புடைய இணைப்புகள்

baakiya starts to settle gopi money baakiyalakshmi promo

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi Promo, Baakiyalakshmi today will find this news story useful.