www.garudabazaar.com
iTechUS

கட்டாயத் திருமணம் அமிர்தாவிடம் கதறிய எழில்.. சூழ்ச்சி அறிந்து கொந்தளித்த பாக்யா.. Baakiyalakshmi

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்கியலட்சுமி தன்னுடைய கணவர் கோபியை விட்டு பிரிந்து வாழ்கிறார். கோபியோ பாக்கியலட்சுமியை அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை முறையாக திருமணம் செய்து கொண்டு அதே தெருவில் இருக்கும்  வீட்டில் குடியேறி வசித்து வருகிறார்.

Baakiyalakshmi Oppose forced marriage new promo

Image Credit : Vijay Television

Also Read | "எல்லா LOCK-ம் அபிஷேக்குக்கு தான் இருக்கு".. VJ மகேஸ்வரி உடனான காட்சி குறித்து மஹத்😍..Kadhal Conditions Apply

இதனிடையே கோபி & பாக்கியலட்சுமியின் மகளான இனியா, தந்தை கோபியை வீட்டுக்கு அழைத்து வந்தே தீர வேண்டும் என்கிற முடிவுடன் கோபியுடன் சென்று வசித்து வருகிறார். இதனிடையே கணவர் கோபியின் உதவியின்றி, கணவரின் குடும்பத்தையும், தனது தொழிலையும் முன்னேற்ற பாடுபடுகிறார் பாக்கியலட்சுமி. அதன் ஒரு பகுதியாக மீண்டும் சமைத்து டேக் அவே உணவு பொருள் கடையை வீட்டிலேயே பல எதிர்ப்புகளை மீறி நடத்துகிறார்.

Baakiyalakshmi Oppose forced marriage new promo

இந்த சீரியலில் பாக்கியலட்சுமி மகனாக வரும் எழில் பாக்கியாவுக்கு உறுதுணையாக இருக்கிறார். அதன் தொடர்ச்சியாக கோபியிடம் இருந்து வீட்டை பணம் கொடுத்து வாங்கி பாக்கியாவிடம் கொடுக்க முற்படுகிறார். அதற்கு தான் எடுக்க போகும் சினிமாவை நம்பி இருந்தார். ஆனால் எழிலின் தயாரிப்பாளரின் மகள் எழில் மீது ஆசைப்பட, எழிலோ, தான் காதலிக்கும் அமிர்தாவையே திருமணம் செய்யவுள்ளதாக கூறுகிறார். இதனால் அவரது பட  தயாரிப்பாளர் கோபப்பட, படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

Baakiyalakshmi Oppose forced marriage new promo

இதனை அடுத்து எழிலின் பாட்டியும் அண்ணனும் அமிர்தாவை விட்டுவிட்டு, தயாரிப்பாளரின் மகள் வர்ஷினியை கல்யாணம் பண்ணச் சொல்லி வற்புறுத்தியதுடன், அந்த தயாரிப்பாளரிடம் எழிலை வர்ஷினிக்கே கல்யாணம் பண்ணி தருவதாக சொல்லி வாக்கு கொடுத்துவிட்டு வீட்டை கோபியிடம் இருந்து வாங்குவதற்கான பணத்தையும் வாங்கிக்கொண்டுவந்துவிட்டனர்.

Baakiyalakshmi Oppose forced marriage new promo

இந்த அழுத்தம் தாங்காமல், வீட்டில் இருக்கும் அனைவருக்காகவும், எழில் அமிர்தாவிடம் சென்று காதலை பிரேக் அப் பண்ணிவிட்டார். இதன் தொடர்ச்சியாக எழிலுக்கு வர்ஷினியுடன் திருமணம் நடக்கவிருக்கிறது. ஆனால் தன் குடும்பத்தினரின் அழுத்தம் காரணமாகவே எழில் இந்த திருமணத்தை பண்ணவிருக்கிறார்.

Baakiyalakshmi Oppose forced marriage new promo

இந்நிலையில் எழிலுக்கு திருமண வரவேற்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது அவருக்கு ஏதோ பிரச்சனை என நினைத்து அங்கு கைக்குழந்தையுடன் வரும் அமிர்தா, அவருக்கு திருமணம் தெரிந்து அதிர்ச்சி அடைந்து உடைந்து அழுகிறார்.

Baakiyalakshmi Oppose forced marriage new promo

நிலைமையை எடுத்துச் சொல்லி அவரிடம் மன்னிப்பு கேட்டு கதறி அழுகிறார் எழில். இதைப் பார்த்த பாக்கியாவுக்கு அப்போதுதான் இது தன் மாமியாரின் நிர்ப்பந்தம் என்றும், வர்ஷினி மற்றும் வர்ஷினியின் தந்தையது சூழ்ச்சி என்றும் தெரியவருகிறது. இதனிடையே வெளியான மற்றொரு ப்ரோமோவில் பேசும் பாக்யா, "கட்டாயத் திருமணத்துக்கு NO சொல்லுங்கள்.. பெற்றோர் இதை மாற்றிக்கொள்ள வேண்டும்.

Baakiyalakshmi Oppose forced marriage new promo

விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டால்தான் சந்தோஷமாக வாழ முடியும், கட்டாயத்திருமணத்துக்கு எதிரான எனது போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள் " என்று கேட்கிறார். எழில் - அமிர்தா விஷயத்தில் என்ன நடக்கும் என்பது ஓரிரு எபிசோடில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | Kadhal Conditions Apply : "சினிமால பணம் பார்க்கவே இல்ல.. ஆனா மகாலட்சுமி வந்த நேரம்.. ".. LIBRA ரவீந்தர் EXCLUSIVE

தொடர்புடைய இணைப்புகள்

Baakiyalakshmi Oppose forced marriage new promo

People looking for online information on Baakiyalakshmi New Promo, Baakiyalakshmi Promo, Baakiyalakshmi serial, Baakiyalakshmi today episode will find this news story useful.