www.garudabazaar.com
iTechUS

டெபிட் கார்ட யாரோ தேச்சுட்டாங்க.. பதறிய கோபி.. ராதிகாவின் Cool Reply.. மனுசன் இடிஞ்சு போயிட்டாரு😅

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்கியலட்சுமி தன்னுடைய கணவர் கோபியை விட்டு பிரிந்து வாழ்கிறார்.

Baakiyalakshmi Gopi On Radhika beauty parlour expense

கோபியோ பாக்கியலட்சுமியை அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை முறையாக திருமணம் செய்து கொண்டு அதே தெருவில் இருக்கும்  வீட்டில் குடியேறி வசித்து வருகிறார்.

இதனிடையே கோபி & பாக்கியலட்சுமியின் மகளான இனியா, தந்தை கோபியை வீட்டுக்கு அழைத்து வந்தே தீர வேண்டும் என்கிற முடிவுடன் கோபியுடன் சென்று வசித்து வருகிறார். இனியா சென்றதால் கோபியின் அப்பாவும் இனியாவின் தாத்தாவுமான பாக்கியலட்சுமியின் மாமனார் அதே வீட்டில் சென்று வசிக்க தொடங்கி விட்டார். இன்னொரு பக்கம் பாக்கியலட்சுமி செய்து வந்த சமையல் காண்ட்ராக்ட் பணி தற்போது சிக்கலை சந்தித்து மீண்டு எழுந்து வருகிறது. ராதிகாவுடனான தேர்தல் போட்டியில் பாக்கியலட்சுமி வெற்றி பெற்றார்.

ராதிகா இப்போதுதான் மெல்ல மெல்ல கோபியின் இன்னொரு முகத்தை அறிந்து கொண்டு வருகிறார். இதேபோல் அதிக வருமானத்தை வைத்தும் குடும்ப செலவுகளை மேனேஜ் பண்ண முடியாமல் ராதிகா திணற, ஆனால் கோபி முன்பு கொடுத்த குறைந்த பணத்தை கொண்டு பாக்கியலட்சுமி குடும்பத்தை நன்றாக நிர்வகித்ததுடன் வகை வகையாக சமைத்து போட்டார்.

இதனிடையே கணவர் கோபியின் உதவியின்றி, கணவரின் குடும்பத்தையும், தனது தொழிலையும் முன்னேற்ற பாடுபடுகிறார் பாக்கியலட்சுமி. அதன் ஒரு பகுதியாக மீண்டும் சமைத்து டேக் அவே உணவு பொருள் கடையை வீட்டிலேயே பல எதிர்ப்புகளை மீறி நடத்துகிறார்.

இந்த நிலையில் கோபி தன்னுடைய போனை ஆராயும் பொழுது அதில் டெபிட் கார்டில் இருந்து யாரோ 16 ஆயிரம் ரூபாய் தேய்த்து எடுத்து விட்டதாக மெசேஜ் வர, உடனே டெபிட் கார்டை யாரோ எடுத்து விட்டார்கள் என அதிர்ந்து போகிறார் கோபி. உடனே ராதிகாவை அழைத்து உன் டெபிட் கார்டு எங்கே இருக்கிறது? உன்னிடம் கொடுத்த அந்த டெபிட் கார்டை தேடு.. யாரோ எனது டெபிட் கார்டில் இருந்து 16 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்து விட்டார்கள் என அலறுகிறார். அதற்கு கூலாக நின்ற ராதிகா, அந்த கார்டு தன்னிடம் தான் இருக்கிறது என்று கூறுகிறார்.

மேலும் தொடரும் கோபி, “நான் எதற்காக சொல்கிறேன் என்று உனக்கு தெரியவில்லை. அந்த கார்டில் இருந்து யாரோ 16 ஆயிரம் ரூபாய் தேய்த்து எடுத்து இருக்கிறார்கள். அதனால் தான் சொல்றேன். அந்த கார்டு எங்கே என்று தேடு” என்கிறார் . அதற்கு மீண்டும் ராதிகா, “அந்த கார்டு என்னிடம் தான் இருக்கிறது கோபி, நான்தான் பாரலரில் 16 ஆயிரம் ரூபாய் செலவு செய்தேன்” என்று சொல்ல கோபி தனக்கு நெஞ்சுவலியே வந்துவிடும் போல் இருக்கிறது என்கிற அளவுக்கு அதிர்ந்து போகிறார்.

மேலும், “நானெல்லாம் சலூனுக்கு சென்றால் 200 ரூபாய் தானே ஆகும்.. உனக்கு 16 ஆயிரம் ரூபாய் பார்லர்ல செலவானதா?” என்று அம்மாஞ்சியாக கேட்கிறார். அதற்கு ராதிகாவோ என்னென்ன வசதிகள் பார்லரில் செய்யப்பட்டன என்பது குறித்து விளக்க அவை ஒன்றுமே தனக்கு புரியவில்லை என்று சொன்ன கோபி, “இது எதுவுமே செய்யாமலே நீ அழகாய் தான் இருப்பாய்” என்று ராதிகாவிடம் வழிகிறார். ஆனால் ராதிகாவோ, “விடுங்க கோபி மாதம் ஒருமுறை தானே!” என்று சொல்லிவிட்டு செல்ல, அப்போது மேலும் அதிரும் கோபி, “என்னது மாத மாதம் 16 ஆயிரம் ரூபாய் பார்லருக்கு செலவு செய்ய வேண்டுமா?” என்று அதிர்ந்து விழுகிறார்.

அத்துடன் பாக்யலட்சுமியையும் பார்லரில் பார்த்ததாக ராதிகா கூற மேற்கொண்டு அதிர்ந்த கோபி , “இப்போ நான் எதுக்கு அதிர்ச்சியாகுறதுனே தெரியலயே” என்று புலம்புகிறார். இந்த காட்சிகள் சென்சேஷனல் ஆகியுள்ளன.

தொடர்புடைய இணைப்புகள்

Baakiyalakshmi Gopi On Radhika beauty parlour expense

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi serial, Baakiyalakshmi serial today, Baakiyalakshmi today episode will find this news story useful.