www.garudabazaar.com

"அப்பா இறந்ததுக்கு அப்புறம் நடந்த விஷயம், சிலிர்த்து போய்ட்டேன்".. நெகிழ்ந்த மயில்சாமி மகன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக விளங்கிய மயில்சாமியின் மறைவு, ஈடு செய்ய முடியாத இழப்பாக மாறி உள்ளது.

Mayilsamy son yuvan shared about others support

Also Read | "மயில்சாமி வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் இப்டி தான் இருக்குமா?".. மனம் குளிர வெச்ச சம்பவம்!!..

பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ள மயில்சாமி, தீவிர சிவ பக்தனாகவும் இருந்து வந்தார். அடிக்கடி திருவண்ணாமலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்த மயில்சாமி, தான் உயிரிழப்பதற்கு முன்பு வரை கூட சிவபெருமானை வழிபட்டு கொண்டிருந்தார்.

இந்த நிலையில், மயில்சாமியின் மகனான யுவன், தற்போது Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், தந்தையின் மரணம் குறித்தும், அதற்கு முன்பு அவருடனான பிணைப்பு குறித்தும் ஏராளாமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

Mayilsamy son yuvan shared about others support

மேலும் தந்தை இறந்த பிறகு அவரை பற்றி நினைத்து சிலிர்த்து போன விஷயங்கள் பற்றி பேசிய மகன் யுவன், "காலையில் 7:00 மணிக்கு வீட்டுக்கு வந்தாச்சு. அப்புறம் விருகம்பாக்கம் போலீஸ் வந்து ரெண்டு பக்கமும் ரோடை பிளாக் பண்ணாங்க. போறவங்க வேணா போட்டும் எதுக்கு பிளாக் பண்ணனும்ன்னு சொல்லி கேட்டோம். வேணாங்க நாங்க பாத்துக்குறோம் அப்படின்னு போலீஸ் சொன்னாங்க. நாங்களும் அத பத்தி அப்புறம் யோசிக்கலை. நேரம் போகப் போக அத்தனை பேர் வரும் போது, அத்தனை பேரும் போகும் போதும் இந்த முக்கு வரைக்கும் தான் நடந்து போலாம், அதுக்கு அப்புறம் வண்டியில ஏறி போயிடலாம்னு நினைச்சேன்.

அதுக்கப்புறம் இங்கிருந்து ஏவிஎம் வரைக்கும் வண்டியே வரல. அப்புறம் தான் ரூட் மாத்தி விட்டு இருக்காங்கன்னு கேள்விப்பட்டேன். இந்த உதவி எதுவுமே நாங்க கேட்காம நடந்துச்சு. அப்பா இறந்ததுக்கு அப்புறம் கொஞ்சம் பணம் எடுத்து வச்சுக்கலாம், யாராவது ஏதாவது தேவைன்னு கேட்டா ஓட வேண்டாம்ன்னு கொஞ்சம் பணம் எடுத்து கையில் வெச்சுருந்தேன்.

Mayilsamy son yuvan shared about others support

இந்த தெரு முழுக்க பந்தல் போட்டுருந்தாங்க. எல்லாத்தையும் முடிச்சிட்டு காலையில வந்து கவனிச்சா யாருமே பணம் வாங்க வரலைன்னு சொல்றாங்க. பந்தல் போட்டவங்க யாருமே காசு வாங்கல, அப்படியே எடுத்துட்டு கிளம்பிட்டாங்க. இன்னொன்னு என்ன வருத்தம்னா ஒரு 100 மீடியா மக்கள் வந்திருந்தாங்க. அவங்களுக்கு தண்ணி கூட கொடுக்கல, சாப்பாடும் கொடுக்கல, சாப்ட்டீங்களான்னு கூட கேட்கல. இது எப்ப தோணுச்சுன்னா எல்லாரும் அனுப்பி விட்டதுக்கு அப்புறம் தான் தோணுச்சு.

ஆனா அவங்களுக்கு நேரத்துக்கு சாப்பாடு எல்லாம் சங்கீதா ஓட்டல்ல இருந்து வந்திருக்கு. எல்லாம் தெரிஞ்ச அவரே எல்லாத்தையும் அனுப்பிவிட்டு இருந்திருக்காரு. இந்த மாதிரி முன்னாடி உதவி பண்ணதுனால, நமக்கு ஒன்னும் வரும் போது எல்லாரும் வந்து உதவி பண்றாங்க.

இவ்ளோ நாள் அப்பாவா பாத்துருக்கேன். மத்தவங்களுக்கு உதவி பண்ணுவாருன்னு தெரியும். ஆனா இப்ப தான் வெளிய இருக்குறவங்க மூலம் அப்பாவை பாக்குறேன்" என தந்தை செய்த உதவி அவர் இறந்த நேரத்தில் திருப்பி உதவியது பற்றி மகன் யுவன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

Also Read | அப்பா குடிச்சதுனால தான் இப்படி ஆகிடுச்சா?.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மயில்சாமி மகன்

"அப்பா இறந்ததுக்கு அப்புறம் நடந்த விஷயம், சிலிர்த்து போய்ட்டேன்".. நெகிழ்ந்த மயில்சாமி மகன் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Mayilsamy son yuvan shared about others support

People looking for online information on Mayilsamy, Mayilsamy son, Mayilsamy son yuvan, Yuvan Mayilsamy will find this news story useful.