முதலில் யானை இப்ப நரி.கொடூரச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த நடிகை அனுஷ்கா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா அச்சுறுத்தலால் உலகமே ஒரு பக்கம் முடங்கிக் கிடக்க, இன்னொரு பக்கம் சிலர் விலங்குகளுக்கு எதிராக கொடூரச் செயல்கள் புரிந்து வருகிறார்கள். கருவுற்ற யானைக்கு அன்னாசி பழத்தில் வெடி மருந்து கலந்து கொடுத்த சம்பவம் அனைவரையும் அதிர்சிக்கு உள்ளாக்கியது.

anushka slams people who killed jackal with explosives

தற்போது திருச்சி குழுமணி அருகே உள்ள வனப்பகுதியில் இறைச்சியில் நாட்டு வெடிகுண்டு வைத்து ஒரு நரியை கொன்றுள்ளனர். இந்தச் சம்பவம் மீண்டும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விலங்குகளுக்கு எதிராக மனிதர்களின் இத்தகைய கொலைவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருவது கண்டிக்கத்தக்கது. நரியை வெடிமருந்து கொடுத்து கொன்ற 12 நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தனது கண்டனத்தை சோஷியல் மீடியாவில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியது, ‘இது எந்த மாதிரியான போக்கு என்று தெரியவில்லை. இது போன்ற கொடூரமான சம்பவங்கள் கடும் அச்சுறுத்தலாக உள்ளது.

விலங்குகளுக்கு எதிரான இத்தகைய கொடுமைகளை எதிர்த்து கடும் சட்டங்கள் உருவாக்கபப்ட வேண்டும்’ என்று நரியின் படத்துடன் தனது எதிர்ப்பை வாட்ஸப் ஸ்டேட்டஸிலும் பதிவிட்டுள்ளார்.

anushka slams people who killed jackal with explosives

People looking for online information on Anushka sharma, Jackel will find this news story useful.