நடிகர் விஜயகாந்த் கோரிக்கை... "எல்லாரும் 'அப்படி' போட்டோ எடுத்து DP-யா வையுங்க".. எப்படி..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க பிரதமர் மோடி வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு இட்டுள்ளார். பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர். அந்த வகையில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பல உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார்

கொரோனா விழிப்புணர்வு நடிகர் விஜயகாந்த் மக்களுக்கு கோரிக்கை Actor Vijaykanth request people to do this as corona awareness

மேலும் சமீபத்தில் இறந்த மருத்துவர் சைமனின் உடலை புதைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நடிகர் விஜயகாந்த் தாமாக முன்வந்து தமது ஆண்டாள் அழகர் கல்லூரியில் இப்படி கொரோனாவால் இறக்கும் மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்து கொள்ளலாம் என்று மனப்பூர்வமாக அறிவித்தார். இந்த அறிவிப்பை மக்கள் பாராட்டித் தள்ளினர்.

இப்படி உதார குணம் உள்ள நடிகர் விஜயகாந்த் தற்போது ஒரு பதிவிட்டுள்ளார். அதில் "தமிழக மக்களும், மற்றும் தேமுதிகவினர் அனைவரும், அவரவர்கள் முகத்தில் Mask, அணிந்து மொபைல் போனில் Selfi படம் எடுத்து டிபியாக (Dp) பதிவிட்டும், அதை சமூக வலைதளங்களில் (Whatsapp DP, Status, Facebook, Instagram, Twitter) போன்றவற்றில் பதிவிட்டும்" என்று கூறியுள்ளார். மக்களின் மனங்களை வென்ற ரியல் ஹீரோவின் இந்த திட்டத்தை மக்கள் வரவேற்றுள்ளனர்.

Entertainment sub editor