'ஒரு வாரத்திற்கும்' மேலாக 'மாத்திரை' போட்டு வருகிறேன்... உங்களுக்கும் வந்துடுச்சா 'மிஸ்டர் பிரசிடெண்ட்...' 'ட்ரம்பின் அசர வைக்கும் பதில்...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | May 19, 2020 04:14 PM

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையை தான் எடுத்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

Trump said he has been taking the HCOS pills for a week

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை பிற நாடுகளை விட அதிகமாக பரவி வரும் நிலையில், மலேரியாவுக்கு எதிரான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையை அமெரிக்க மருந்து துறை பரிந்துரைத்தது. அதிபர் டொனால்ட் ட்ரம்பும் அதனை உலக நாடுகளுக்கு பரிந்துரைத்தார்.

இந்நிலையில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளின் பாதுகாப்புத் தன்மையை ஆய்வாளர்கள் பலரும் கேள்விக்குட்படுத்தி எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில், தனது சொந்த அரசின் வல்லுநர்கள் கூறும் மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயினை தான் கடந்த ஒரு வாரமாக சாப்பிட்டு வருவதாக  என்று அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவியதில் இருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்பாட்டை ஊக்குவிப்பதில் டிரம்ப்  ஆர்வம் காட்டி வருகிறார், சில மருத்துவர்கள் இது கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக வேலை செய்யும் என்று நினைத்தாலும், அமெரிக்க அரசாங்க  மருந்து கட்டுப்பாட்டாளர்கள் இது பாதுகாப்பாக இருப்பதாக நிருபிக்கப்படவில்லை என்று எச்சரிக்கின்றனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டொனால்டு டிரம்ப், "2 முறை பரிசோதனை செய்து உள்ளேன்.எனக்கு அறிகுறிகளைக் காட்டவில்லை சுமார் ஒன்றரை வாரங்களாக ஒரு தடுப்பு நடவடிக்கையாக இந்த மருந்தை உட்கொண்டுவருகிறேன். நான் ஒவ்வொரு நாளும் ஒரு மாத்திரை எடுத்துக்கொள்கிறேன்" என கூறினார்.

ஏன் என்று கேட்டதற்கு ஏனென்றால் இது நல்லது என்று நான் நினைக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். 

நோய் பாதிப்பு இல்லாமல் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளக் கூடாது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.