ராஜபக்சே சகோதரர்கள் நாட்டை விட்டு வெளியேற தடை.. உச்ச நீதிமன்றம் அதிரடி.. மீண்டும் பரபரப்பான இலங்கை..இப்ப என்ன ஆச்சு..?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Jul 29, 2022 12:00 PM

இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே ஆகியோர் நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Sri Lanka SC extends overseas travel ban on Rajapaksa brothers

Also Read | "உங்க போனை நான் எடுக்கல"..கதறிய இளைஞர்.. ஆத்திரத்தில் நண்பர்கள் செஞ்ச காரியம்.. சோகத்தில் முடிந்த பார்ட்டி..!

இலங்கை போராட்டம்

கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்துவந்த இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் கடந்த வாரம் தடையை மீறி நுழைந்தனர். மேலும், மாளிகையில் இருக்கும் அறைகள் மற்றும் நீச்சல் குளங்களை போராட்டக்காரர்கள் பயன்படுத்தும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வந்தன. அதிபர் மற்றும் பிரதமர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது என போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர்.

Sri Lanka SC extends overseas travel ban on Rajapaksa brothers

அதிரடி மாற்றங்கள்

இதனை தொடர்ந்து அதிபர் கோத்தபய நாட்டை விட்டு தப்பித்து மாலத்தீவுக்கு சென்று பின்னர் அங்கிருந்த சிங்கப்பூருக்கு சென்றார். இதனால் இலங்கையில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. இதனையடுத்து இடைக்கால அதிபராக இருந்த ரணில் விக்ரமசிங்கே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து தினேஷ் குணவர்த்தன-வுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டது. இருப்பினும் மக்கள் தொடர்ந்து போராடிக்கொண்டிருப்பதாக தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

Sri Lanka SC extends overseas travel ban on Rajapaksa brothers

வெளியேற தடை

இந்நிலையில், இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆளுநராக இருந்த அஜித் நிவார்ட் கப்ரால் ஆகியோரை ஆகஸ்டு 2 ஆம் தேதி வரையில் நாட்டை விட்டு வெளியறக்கூடாது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை ஜூலை 28 ஆம் தேதியுடன் முடிவடைந்ததால் இந்த மீண்டும் இதுகுறித்து மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

Sri Lanka SC extends overseas travel ban on Rajapaksa brothers

இந்த விசாரணை கடந்த புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது 3 பேரும் ஆகஸ்டு 2 ஆம் தேதிவரையில் நாட்டை விட்டு வெளியேற கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் மீண்டும் இலங்கையில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

Also Read | இட்லி முதல் இத்தாலி வரை... செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவுகள்.. அடேங்கப்பா இவ்வளவு வகைகளா..?

Tags : #SRILANKA #SRI LANKA SC #TRAVEL #RAJAPAKSA BROTHERS #BAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sri Lanka SC extends overseas travel ban on Rajapaksa brothers | World News.