'கொட்டி தீர்த்த மீன் மழை...' 'வானத்துல விண்மீன் தானே இருக்கும்...' மீன் மழைலாம் எப்படிங்க பெய்யும்...? -ஆச்சரியப்பட வைக்கும் தகவல்...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Behindwoods News Bureau | Dec 22, 2020 03:40 PM

இலங்கையின் மஹியங்கனை பிரதேசத்தில் மீன் மழை பெய்து மக்கள் அள்ளி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sri lanka fish rain fell Mahiyanganai area with rain water

நான்கு புறமும் கடலை அரணாக கொண்ட இலங்கை நாட்டின் மஹியங்கனை பிரதேசத்தில் நேற்று மீன் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வறண்ட வானிலை பகுதியான அங்கு திடீரென பெய்த மழையின் போது மழை நீருடன் மீன்களும் விழுந்துள்ளன.

இந்த அதிசய மீன் மழையை குறித்து வானிலை ஆய்வு மையம் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக் கூறும் போது, 'சிறிய புயல் காற்று நீர் நிலைகளுக்கு அருகில் செல்லும் போது ஓர் சிறிய வால் போன்றதொன்று உருவாகும் என கூறப்படுகிறது. அதன் வழியாக நீர் உறிஞ்சப்பட்டு மேகத்திற்கு எடுத்துச் செல்லப்படும், அப்போது அதனுடன் மீன்களும் மேகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மழை பெய்யும் போது நீருடன் மீன்களும் வந்து விழும்' என கூறியுள்ளார்.

இந்த மீன் மழையில் மஹியங்கனை பிரதேசத்தில் சிலர் 30 முதல் 35 கிலோ வரை மீன்களை அள்ளிச் சென்றதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sri lanka fish rain fell Mahiyanganai area with rain water | World News.