"பார்க்க என்னை மாதிரியே இருக்கணும்".. இளம்பெண்ணின் பதற வைக்கும் பிளான்.. போலீசுக்கு வந்த சந்தேகம்.. உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Feb 03, 2023 12:09 AM

ஜெர்மனி நாட்டில் பார்ப்பதற்கு தன்னைப் போலவே இருக்கும் இளம் பெண்ணை தேடி கொலை செய்த பெண் ஒருவரை காவல் துறையினர் கைது செய்திருக்கின்றனர். இது தொடர்பாக வெளியான தகவல்கள் அந்நாட்டையே அதிர வைத்துள்ளது.

German woman slayed her look alike to fake her own death

                             Images are subject to © copyright to their respective owners

ஜெர்மனியின் மைன்ஸ் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளம்பெண் ஒருவர் கடந்த ஆண்டு காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் காவல் துறையில் புகார் அளித்திருக்கின்றனர். இது தொடர்பாக போலீஸ் விசாரணையில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் காணமல்போனதாக சொல்லப்பட்ட பெண்ணின் காரும் அதன் உள்ளே இளம்பெண்ணின் சடலமும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, தங்களது மகளை காணவில்லை என புகார் அளித்த தம்பதிக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners

இதனிடையே நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் அந்த உடல் காணாமல்போன பெண்ணுடையது இல்லை என்பது தெரியவந்திருக்கிறது. இது அந்த பெற்றோருக்கு ஆறுதல் அளித்தாலும் போலீசாருக்கு இன்னொரு சந்தேகமும் வந்திருக்கிறது. பார்ப்பதற்கு காணாமல்போன பெண்ணை போலவே இருக்கும் இளம்பெண் கொலை செய்யப்பட்டது போலீசாரை குழப்ப இது தொடர்பான விசாரணை சூடுபிடித்தது.

அதன் பலனாக பல தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. அதாவது காணமல்போனதாக சொல்லப்பட்ட பெண், தன்னைப்போலவே இருக்கும் பெண்ணை கண்டுபிடிக்க முயற்சித்திருக்கிறார். அதற்கு சமூக வலை தலங்களையும் அவர் பயன்படுத்தியிருக்கிறார். அப்படி ஒரு சூழ்நிலையில் தன்னை போலவே உருவம் கொண்ட பெண்ணை அவர் கண்டுபிடித்ததும் அவரிடம் நட்பாக பழகி இருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners

தொடர்ந்து தன்னுடைய ஆண் நண்பரின் உதவியுடன் அந்த இளம்பெண்ணை தனியாக அழைத்துச் சென்று கொலை செய்திருக்கிறார் அந்த 23 வயது பெண். அதன்பின்னர் போலீசார் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் இங்கோல்ஸ்டட் எனும் இடத்தில் பதுங்கி இருந்த அந்த பெண்ணை கைது செய்திருக்கின்றனர்.

இதுகுறித்து போலீசார் பேசுகையில்,"குற்றம்சாட்டப்பட்ட 23 வயதான பெண்ணுக்கு குடும்பத்தில் சிக்கல்கள் இருந்திருக்கின்றன. அதனால் இங்கிருந்து வெளியேறி புதிய வாழ்க்கையை துவங்க நினைத்திருக்கிறார். அதற்காக தன்னை போலவே இருக்கும் பெண்ணை தேடிக்கண்டுபிடித்து ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்திருக்கிறார் அதன்பிறகு கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை தனது காரில் போட்டுவிட்டு அங்கிருந்து தனது நண்பருடன் தப்பிச்சென்றிருக்கிறார்" எனத் தெரிவித்திருக்கின்றனர். இந்த சம்பவம் அந்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #GERMANY #DOPPELGANGER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. German woman slayed her look alike to fake her own death | World News.