'குளியல் அறையில் இருந்து .. அலறித் துடித்தபடி ஓடிவந்த 23 வயது கர்ப்பிணி பெண்!'.. சத்தம் கேட்டு வந்தவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. திருச்சியில் சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 07, 2020 09:45 AM

திருச்சி, துறையூர் அருகே உள்ள கோட்டப்பாளையம் காட்டுக்கொட்டகை பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் வேல்முருகனின் மனைவி, ரஞ்சனா (23).

trichy young pregnant mother sets fire on herself

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன இத்தம்பதியருக்கு, ஒன்றரை வயதில்  கமலேஷ் என்கிற ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் 2 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார் ரஞ்சனா. அப்படியிருக்க, சில நாட்களுக்கு முன், வேல்முருகன் வேலைக்காக, வெளியூர் சென்ற பின்னர், வேல்முருகனின் குடும்பத்தினருடன், ரஞ்சனா வீட்டிலேயே இருந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு, வீட்டுக்கு வெளியே இருந்த பாத்ரூமுக்கு சென்ற ரஞ்சனா, யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென தன் ஒன்றரை வயது குழந்தையுடன் தானும் தீக்குளித்து, உயிரை மாய்த்துக்கொண்டார். இதுபற்றி வழக்குப்பதிவு செய்து உப்பிலியபுரம் போலீசார், விசாரிப்பதுடன், வரதட்சணை பிரச்சனை காரணமாக, ரஞ்சனா தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து, முசிறி, சப் - கலெக்டர் ஜோதிசர்மாவும் விசாரித்து வருகிறார்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Trichy young pregnant mother sets fire on herself | Tamil Nadu News.