எழுதுனது 3 லட்சம் பேர், ஆனா பாஸ் பண்ணது..? அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆசிரியர் தேர்வு ரிசல்ட்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Aug 23, 2019 05:08 PM

ஆசிரியர் தகுதி தேர்வில் ஒரே ஒரு சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்திருப்பது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TN TET results released 300 teachers passed in 2nd Paper

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வை  (TET) ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. 1 -ம் வகுப்பு முதல் 5 -ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளிலும், 8 -ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.

அந்த வகையில் ஆசிரியர் தேர்வின் முதல் தாள் ஜீன் மாதம் 8 -ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர். தேர்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியானது இதில் 1 சதவீதத்தினரே தேர்ச்சி பெற்றிருந்தனர். இதனை அடுத்து நடைபெற்ற இரண்டாம் தாள் தேர்வை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதியிருந்தனர்.

இந்த தேர்வின் முடிவுகள் நேற்று வெளியாகி இருந்தது. இதில் 300 -க்கும் அதிகமானோர் மட்டுமே தேர்ச்சி அடைந்திருந்தனர். மொத்தமாக தேர்வு எழுதியவர்களில் 1 சதவீகத்தினரே தேர்ச்சி அடைந்துள்ளனர். மீதமுள்ள 99 சதவீதம் பேர் தோல்வி அடைந்திருப்பது ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #TET #RESULTS #TAMILNADU