'போதைப் பழக்கம்'.. 'அதான் கொன்னுட்டேன்'.. மனைவியைக் கொன்ற பின் கணவரின் விபரீத முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 11, 2019 10:44 AM

திருப்பூர் அருகே காதல் மனைவியைக் குத்திக் கொன்றுவிட்டு, தானும் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்ற கணவரது செயல் அதிரவைத்துள்ளது.

TN husband kills his wife and attempted for suicide

ஊத்துக்குளியைச் சேர்ந்தவர் நிசார். இவர் அசினா என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.  ஏற்கனவே திருமணமான நிசார், அசினாவை 2வது திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தார். இருவருக்கும் இடையே அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக நெடுநேரமாக வீட்டிற்குள் இருந்து இருவரும் வெளிவராததால் உறவினர்கள் சந்தேகமடைந்தனர்.

நீண்ட நேரமாகியும் வெளிவராத தம்பதியரின் வீட்டுக் கதவைத் தட்டிப் பார்த்துள்ளனர். ஆனால் கதவையும் திறக்காததால், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது அசினா குத்திக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். நிசார் கழுத்தறுத்துக்கொண்ட நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

இதனையடுத்து, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் தனக்கு இருந்த போதைப் பழக்கத்தால் தன் மனைவியுடன் பிரச்சனை ஏற்பட்டதாகவும் அதனால் மனைவியைக் கொன்றதாகவும் அவர் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.

Tags : #TIRUPPUR