தமிழகத்தில் 6,009 பேரை ஆக்கிரமித்த கொரோனா!.. 40 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை!.. முக்கிய தரவுகள்... ஓரிரு வரிகளில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | May 08, 2020 07:11 PM

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

tn coronavirus covid19 updates and statistics as on may 08

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான தகவலில் இன்று மட்டும் தமிழகத்தில் 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,009 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,605 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 4,361 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று ஒரே நாளில் 399 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3043 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போதுவரை 2,06,407 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இன்று பதிவாகியுள்ள 600 பேரில் பெரும்பாலானோர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று தெரியவந்துள்ளது.