'தமிழகத்தின் இன்றைய (10-10-2020) கொரோனா அப்டேட்'... 'சென்னையில் மட்டும் ஒரே நாளில்'... 'முழு விவரங்கள் உள்ளே!'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Oct 10, 2020 06:32 PM

தமிழகத்தில் இன்று (10-10-2020) ஒரே நாளில் 5,242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

TN Chennai Corona Updates And Statistics As On October 10th

கொரோனா பாதிப்படைந்த  5,242 பேரில் 5,234 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், 8 பேர் வெளிநாடு, வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மொத்தமாக பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 6,51,370 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 44,150 ஆக உள்ளது.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,272 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,80,751 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக அதிகப்பட்சமாக கோயம்பத்தூரில் 392 பேருக்கும், சேலத்தில் 339 பேருக்கும், செங்கல்பட்டில் 309 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 5,222 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,97,033 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைப் பொறுத்தவரை இன்றைய தினம் அரசு மருத்துவமனையில் 36 பேர், தனியார் மருத்துவமனையில் 31 பேர் என மொத்தம் 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்தமாக தற்போது வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10,187 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. TN Chennai Corona Updates And Statistics As On October 10th | Tamil Nadu News.