அண்ணியுடன் ஏற்காடு போன கொழுந்தனார்.. லாட்ஜ் பாத்ரூமில் நடந்த விபரீதம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Jan 07, 2022 01:20 PM

சேலம் : ஏற்காடு தனியார் விடுதி ஒன்றில், பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sister in law went to yercaud died in a private lodge

ஏற்காடு பகுதியில், விஜய் மற்றும் மஞ்சு ஆகிய இருவர் சுற்றுலா வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதியில் இருவருமாக விடுதி ஒன்றில் வாடகை எடுத்து தங்கியுள்ளனர்.

இதனிடையே, நள்ளிரவில் மஞ்சு என்ற அந்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து, இதுகுறித்து ஏற்காடு போலீசார், தகவலின் அடிப்படையில், அந்த விடுதிக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி

மேலும், அந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காகவும் அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, போலீசார் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில், விஜய் என்பவரின் அண்ணி தான் மஞ்சு என்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கள்ளத் தொடர்பின் காரணமாக, ஏற்காட்டிற்கு வந்து தனி அறை எடுத்து தங்கியுள்ளனர்.

முற்றிய வாக்குவாதம்

இதனையடுத்து, இரவு நேரம் மது அருந்தி விட்டு, அறைக்கு விஜய் வந்ததாக கூறப்படுகிறது. தனக்கு, வரும் 23 ஆம் தேதி திருமணம் நடக்கப் போவதாகவும், திருமணத்திற்குப் பிறகு, தங்களின் உறவைத் தொடர முடியாது என்றும் மஞ்சுவிடம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பாத்ரூமில் விபரீதம்

தொடர்ந்து, ஒரே அறையில் தூங்கியுள்ளதாகவும் தெரிகிறது. இதனையடுத்து, திடீரென இரவு மூன்று  மணியளவில், விஜய் கண் விழித்து பார்க்கும் போது,அருகேயிருந்த மஞ்சுவைக் காணவில்லை என கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியில் விஜய் தேடியுள்ளார். அப்போது, கழிவறையில், தண்ணீர் விழும் சத்தம் கேட்க, மஞ்சு கழிவறைக்கு சென்று இருக்கலாம் என எண்ணிய விஜய், வெகு நேரம் ஆகியும், மஞ்சு வராத காரணத்தினால் கழிவறையை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அதிர்ச்சியில் கொழுந்தனார்

அப்போது, நிர்வாணமாக மஞ்சு தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளதாக, விஜய் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவரைத் தூக்கி வந்து, கட்டிலில் கிடத்திய விஜய், அவர் மீது துணிகளை போட்டு விட்டு பார்த்துள்ளார். தொடர்ந்து, அவரைப் பரிசோதித்ததில் இறந்து போனதும் தெரிய வந்துள்ளது.

உறவு உருவானது எப்படி?

போலீசார் விசாரணையில், இது பற்றியான தகவலை, விஜய் கூறியுள்ளார். அது மட்டுமில்லாமல், போலீசார் மேற்கொண்ட விசாரணையில், விஜய் மற்றும் மஞ்சு குடும்பத்தினர் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன்கள் விஜய் மற்றும் பிரபு. இதில் அண்ணன் பிரபுவிற்கு, மஞ்சுவுடன் திருமணம் நடந்துள்ளது. இவர்கள் இருவருக்கும், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

காரணம் என்ன? 

இவர்கள் அனைவரும் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர்.  இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு, அண்ணன் பிரபு, வேலைக்காக  வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, தம்பி விஜய்க்கும், அண்ணி மஞ்சுவுக்கும் இடையே  தவறான உறவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அண்ணன் ஊரில் இல்லாத காரணத்தினால், இருவரும் அடிக்கடி வெளியே சென்று உல்லாசமாக இருந்து வருவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் தான், விஜய்க்கு திருமணம் என்ற செய்தியை அறிந்து,  மஞ்சு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, வேதனையில் மஞ்சு தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மஞ்சு தற்கொலை செய்ததாக கூறப்படும் நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #SALEM #ILLEGAL AFFAIR #ஏற்காடு #சேலம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sister in law went to yercaud died in a private lodge | Tamil Nadu News.