Valimai BNS

என் வாழ்க்கை சந்தோஷமா இல்லம்மா.. திருமணம் நடந்து ஒரு மாசம் கூட முடியல.. மகள் எடுத்த முடிவினால் உடைந்து நொறுங்கிய பெற்றோர்

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Feb 23, 2022 08:48 AM

நாகர்கோவில்: நாகர்கோவிலில் திருமணமான 1 மாதத்தில் இளம்பெண் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குறித்து, போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

sad decision of Nagercoil girl in 1 month of marriage

நாகர்கோவில் வாத்தியார்விளை பகுதியை சேர்ந்தவர் செல்வமூர்த்தி (34 வயது). கொத்தனாராக பணிபுரியும் இவருக்கும், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த கணேசன்  என்பவரது மகள் தனுசியா (20 வயது) என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 23-ஆம் தேதி அன்று  திருமணம் நடந்துள்ளது.

சில நாள்களில் உருவான சண்டை:

திருமணத்துக்கு பிறகு தனுசியா, நாகர்கோயில் வாத்தியார் விளையில் உள்ள கணவர் வீட்டில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சண்டை  காரணமாக, தனுசியா உடைந்து நொறுங்கிய நிலையில் இருந்துள்ளார். இது பற்றி தனது அம்மா அப்பாவிடம் பேசிய தனுசியா, திருமண வாழ்க்கை தனக்கு மகிழ்ச்சியாக இல்லை என கூறி வருத்தப்பட்டுள்ளார். அப்போது அவர்கள் போக போக சரியாகி விடும் என மகளுக்கு ஆறுதல் கூறி உள்ளனர். கணவன், மனைவி இருவரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

அழுது துடித்த பெற்றோர்:

இந்நிலையில் நேற்று முன் தினம் மதியம் வீட்டில் தனியாக இருந்த தனுசியா, திடீரென சுருக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இதனையடுத்து வீட்டின் அருகாமையில் வசிப்பவர்கள் வடசேரி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தனுசியா உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆலங்குளத்தில் உள்ள தனுசியாவின் பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் உடனடியாக நாகர்கோவில் வந்து சேர்ந்தனர் . மகளின் உடலை பார்த்து அழுது துடித்தனர்.

விசாரணை தொடக்கம்:

இது பற்றி தனுசியாவின் தந்தை கணேசன் வடசேரி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி சுமார் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், தனுசியா உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி தற்போது ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம் மற்றும் டி.எஸ்.பி. நவீன்குமார் ஆகியோர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

வரதட்சணை கொடுமையால் இந்த சம்பவம் நடந்துள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது.

Tags : #NAGERCOIL #GIRL #MARRIAGE #நாகர்கோவில் #திருமணம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sad decision of Nagercoil girl in 1 month of marriage | Tamil Nadu News.