'கண்டிப்பா வந்துருங்க' தாம்பூல தட்டுடன் வீடு வீடாக சென்று அழைப்பு விடுத்த கவுன்சிலர்.. இதுதான் விஷயமா..? வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Nov 01, 2022 10:22 AM

நாமக்கல் மாவட்டத்தில் கவுன்சிலர் ஒருவர் நகர சபை கூட்டத்திற்கு தாம்பூலம் வைத்து மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Rasipuram Councillor invites peoples for meeting in a unique way

Also Read | T20 போட்டி "பறந்தது எல்லாம் சிக்ஸ், ஃபோர் தான்".. 150+ அடிச்சு கலக்கிய "குட்டி ஏபிடி".. "Gayle ரெக்கார்டு காலி".. மிரண்ட ரசிகர்கள்!!

தமிழகத்தில் குடியரசு தினம், சுதந்திர தினம், தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி, மார்ச் 22, நவம்பர் 1-ல் கிராம சபை கூட்டம் நடைபெறும் என தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் அண்மையில் சட்டசபையில் அறிவித்திருந்தார். கிராம மக்கள் தங்களது குறைகள் மற்றும் தேவைகளை இந்த கூட்டத்தில் அதிகாரிகளிடத்தில் நேரடியாக கூறலாம். இருப்பினும், தமிழகத்தில் நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையிலும், நகர சபை மக்கள் கூட்டம் நடைபெறாமல் இருந்தது.

Rasipuram Councillor invites peoples for meeting in a unique way

இதனையடுத்து, நகர சபை கூட்டங்களை நடத்துமாறு முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, இன்று (நவம்பர் 1) தமிழகத்தில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன. அதேபோல, நகர மற்றும் மாநகர சபைகளையும் இன்று நடத்தும்படி முதல்வர் தெரிவித்திருந்தார். இந்த கூட்டத்தில் நகர மக்கள் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் உள்ள குடிநீர், மின் இணைப்பு, கழிவுநீர் கால்வாய் பிரச்சனைகள் குறித்து கருத்துக்களை முன்வைக்கலாம்.

இந்த கூட்டத்தில் அந்தந்த கவுன்சிலர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். மக்களின் குறைகளை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வுகாண நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் முதல்வர் அறிவித்திருந்தார். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் 12 வது வார்டு கவுன்சிலர் சசி ரேகா மிகவும் வித்தியாசமான முறையில் தனது வார்டு மக்களை நகர சபை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

Rasipuram Councillor invites peoples for meeting in a unique way

நகரசபை கூட்டத்திற்கு அழைப்பிதழ் அச்சடித்து, வெற்றிலை, பாக்கு, பழம், குங்குமம் ஆகியவற்றை வைத்து மக்களை நகர சபை கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருக்கிறார் சசி ரேகா. வீடு வீடாக சென்று மக்களிடம் நகர சபையின் முக்கியத்துவம் குறித்தும் அவர் எடுத்துக்கூறி அழைப்பிதழை அவர் கொடுத்துள்ளார். சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சசி ரேகா முதல்வரின் உத்தரவை நடைமுறைப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இது அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. இந்நிலையில், மக்களை அவர் சந்தித்து தாம்பூலம் வைத்து நகர சபைக்கு அழைப்பு விடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Also Read | "என் மனைவிக்கு நடந்தது யாருக்கும் நடக்க கூடாது".. புதிய வீட்டில் மனைவிக்கு 'சிலை'.. மனம் உடைய வைக்கும் பிளாஷ்பேக்!!

Tags : #RASIPURAM COUNCILLOR #INVITES #PEOPLES #MEETING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Rasipuram Councillor invites peoples for meeting in a unique way | Tamil Nadu News.