"மணிரத்னம் இருட்டுல படம் எடுப்பாரேன்னு சந்தேகப்பட்டேன்.. பார்த்த அப்புறம்" - பொன்னியின் செல்வன் விழாவில் அமைச்சர் துரைமுருகன்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Mar 30, 2023 01:17 PM

பொன்னியின் செல்வன் - 2 படத்தின் டிரெய்லர் மற்றும் இசைவெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

Minister Durai Murugan speech in Ponniyin selvan 2 audio launch

                      Images are subject to © copyright to their respective owners.

அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார். இதனை லைகா நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரித்திருக்கிறது. பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவியது.  இந்த படம் உலகம் முழுவதும் 500+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.

Images are subject to © copyright to their respective owners.

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம்  PS-2 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த பொன்னியின் செல்வன் படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்துள்ளார், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், நேரு உள்விளையாட்டரங்கத்தில் நேற்று நடைபெற்ற இசை & டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் கமல்ஹாசன், ரேவதி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய அமைச்சர் துரைமுருகன்,"ஒரு வரலாற்று கதையை வரலாற்றில் நிற்க கூடிய அளவில் வெளியிட்டு இருக்கும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த கதையை என்னுடைய கல்லூரி காலத்தில் 5 முறை படித்துள்ளேன். இந்த படத்தை சுபாஸ்கரன் எடுக்கப் போறேன் என்றார்.

Images are subject to © copyright to their respective owners.

மணிரத்னம் இயக்குவதாக கூறியபோது அவர் இருட்டில் படம் எடுப்பாரே.. அவரால் முடியுமா? என சந்தேகப்பட்டேன். ஆனால் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை பார்த்த பிறகு பிரம்மித்துவிட்டேன். மணியால் இப்படிக்கூட படம் எடுக்க முடியுமா என வியந்தேன். என் பேச்சை கேட்காமல் படமெடுத்த சுபாஸ்கரனுக்கு வாழ்த்துக்கள். மணிரத்னத்திற்கு எனது சல்யூட்" என்றார்.

Tags : #PONNIYIN SELVAN #DURAIMURUGAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Minister Durai Murugan speech in Ponniyin selvan 2 audio launch | Tamil Nadu News.