VIDEO: இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மீட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்.. மருத்துவர் வெளியிட்ட தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 12, 2021 05:08 PM

சென்னை காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி மீட்ட இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Man rescued by brave Chennai woman police dies at hospital

சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் உதயா என்ற இளைஞர் நேற்று மயங்கிக் கிடந்தார். இவரை டி.பி சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Man rescued by brave Chennai woman police dies at hospital

இதுகுறித்து தெரிவித்த மருத்துவர், ‘இளைஞர் உதயா மதுபோதைக்கு அடிமையாக இருந்துள்ளார். மேலும் காசநோய்க்காக (TB) சிகிச்சையும் பெற்று வந்ததுள்ளார். மருத்துவமனைக்கு அழைத்து வரும்போதே கோமா நிலையில்தான் இருந்தார். ஐசியூவில் வைத்து தீவிர சிகிச்சை அளித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை’ என தெரிவித்துள்ளார்.

Tags : #POLICE #RAJESHWARI #CHENNAIRAINS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man rescued by brave Chennai woman police dies at hospital | Tamil Nadu News.