Kaateri logo top

காதலித்து திருமணம் செய்துகொண்ட இளம்பெண்.. ஒரே மாசத்துல நடந்த அதிர்ச்சியான சம்பவம்.. காலைல தோட்டத்துக்கு போனவர் கண்ட பயங்கர காட்சி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Aug 04, 2022 12:00 PM

திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் பெண்ணின் காதல் கணவர் மற்றும் மாமனார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

Husband and father in law arrested in young bride death case

Also Read | போரை வென்ற காதல்.. உக்ரைன் காதலியை கரம்பிடித்த ரஷ்ய வாலிபர்.. கல்யாணம் நடந்த இடம் தான் 'செம'..

காதல் திருமணம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.பிரம்மதேசம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவருடைய மகன் கோபிநாத். இவருக்கு 25 வயது ஆகிறது. இந்நிலையில் கோபிநாத்தும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி சென்னையில் இவருடைய திருமணமும் நடைபெற்றிருக்கிறது. இதனை எதிர்த்து பெண்ணின் தந்தை முருகன் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்.

Husband and father in law arrested in young bride death case

விசாரணை

இதனை தொடர்ந்து கடந்த ஜூலை 2 ஆம் தேதி பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் புதுமண பெண்ணை அழைத்து விசாரணை நடத்தினர் காவல்துறையினர். அப்போது, தன்னுடைய விருப்பத்தின் அடிப்படையிலே திருமணம் செய்துகொண்டதாக கூறியுள்ளார் அந்த பெண். இதைத் தொடர்ந்து கோபிநாத்துடன் அந்த பெண் செல்ல அனுமதித்தனர் காவல்துறையினர்.

இதனிடையே, நேற்று முன்தினம் தனது அம்மா வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு கணவர் வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றிருக்கிறார் இளம் பெண். ஆனால், அவர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த கோபிநாத் குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடியிருக்கின்றனர். ஆனால், அவர்களால் பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை.

அதிர்ச்சி

இந்நிலையில், பெரியதச்சூர் காவல் நிலையத்துக்கு ஒருவர் போன் செய்திருக்கிறார். அவர் தனது தோட்டத்துக்கு சென்றபோது வயலில் இளம்பெண்ணின் சடலத்தை பார்த்ததாக போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அது காணாமல்போன கோபிநாத்தின் மனைவி தான் என்பது தெரியவந்திருக்கிறது. இந்த விஷயத்தை அறிந்த பெண்ணின் தந்தை மாப்பிள்ளை வீட்டார் தனது மகளை கொலை செய்துவிட்டதாக போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

Husband and father in law arrested in young bride death case

இதைத் தொடர்ந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி எதிரே பெண்ணின் உடலை வாங்க மறுத்து, கோபிநாத் அவரது தந்தை ஸ்ரீதர், தாய் பூமாதேவி, சகோதரர் ஸ்ரீராம் ஆகியோரை கைது செய்யக்கோரி உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன்படி ஸ்ரீதர் மற்றும் அவரது மகன் கோபிநாத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய இருவர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பெண்ணின் உடலை உறவினர்கள் வாங்கிக்கொள்ள சம்மதித்தனர். திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் மரணமடைந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | கொட்டித்தீர்க்கும் கனமழை.. தமிழகத்தில் இன்றும் ரெட் அலெர்ட்.. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட எச்சரிக்கை..!

Tags : #VILUPPURAM #HUSBAND #FATHER IN LAW #ARREST #BRIDE DEATH CASE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Husband and father in law arrested in young bride death case | Tamil Nadu News.