‘அடுத்த 2 நாட்கள்’... சில இடங்களில் ‘மிதமான’ மழை... 11 மாவட்டங்களில் ‘கனமழை’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 24, 2019 03:41 PM

தமிழகம் மற்றும் புதுவையில், ஓரிரு இடங்களில் மிதமான மழையும், 11 மாவட்டங்களில் கனமழையும், பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

heavy rain alert in 11 south east districts in chennai imd

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, வடக்கு நோக்கி நகர்ந்து ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவி வருகிறது. இதன்காரணமாக, கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் குறைவான மழையே இருந்து வந்தது. இந்நிலையில், அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

இதன்காரணமாக, தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, அடுத்த 24 மணிநேரத்தில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. எனினும், நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

Tags : #RAIN #ALERT #SOUTH #DISTRICTS #HEAVY #TAMIULNADU