"பிரேமலதாவின் முதல்நிலை பரிசோதனைக்கு பின்னரே விஜயகாந்த்..."... மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 28, 2020 06:20 PM

கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி  லேசான அறிகுறியுடனான தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பு இருந்ததை அடுத்து, தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

DMDK: Premalatha vijayakanth test positive for covid19

பின்னர் கொரோனா பாதிப்பில் இருந்து விஜயகாந்த் குணமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து விஜயகாந்த் மருத்துவமனையிலிருந்து இன்று இரவு வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து ஓய்வெடுக்க மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியதாக தெரிகிறது.

DMDK: Premalatha vijayakanth test positive for covid19

இந்நிலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், பிரேமலதாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் 22-ஆம் தேதி அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டபோது, கொரோனா தொற்று இல்லை என ரிசல்ட் வந்தது.

இந்நிலையில் இதுபற்றிய அறிக்கையை வெளியிட்ட மியாட் மருத்துவமனை, “பிரேமலதாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை சீராக உள்ளது.” என்றும் “பிரேமலதாவின் முதல்நிலை பரிசோதனைக்கு பின் திரு.விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அவருடைய உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு கொரோனா அறிகுறி இல்லை. தொடர் மருத்துவ சிகிச்சைகளால் அவர் நலமாகியுள்ளார்.” என்று குறிப்பிட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. DMDK: Premalatha vijayakanth test positive for covid19 | Tamil Nadu News.