'முகக்கவசம்' கட்டாயம்... பின்படிக்கட்டுகள் 'வழியாக' மட்டுமே ஏற வேண்டும்... பேருந்து இயக்கத்திற்கான விதிமுறைகள் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | May 31, 2020 03:36 PM

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்கள் தவிர்த்து தமிழகத்தின் பிற பகுதிகளில் நாளை முதல் 50% பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பேருந்துகள் இயக்கத்திற்கான வழிமுறைகள் குறித்தும் தமிழக அரசு விதிமுறைகள் வெளியிட்டு உள்ளது. அதுகுறித்து கீழே பார்க்கலாம்:-

COVID-19: Tamil Nadu Government issues Transport Guidelines

* பணிக்கு வரும் ஓட்டுநர், நடத்துநரின் உடல் வெப்பநிலையை சோதிக்க வேண்டும்

* ஓட்டுநர், நடத்துநர் ஆகியோருக்கு ஒரு பாட்டில் கிருமி நாசினி வழங்கப்பட வேண்டும்; முகக்கவசம், கையுறை  கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.

* குளிர்சாதன பேருந்துகளில் ஏசி பயன்பாட்டை நிறுத்திவைக்க வேண்டும்.

* பேருந்தின் பின்படிக்கட்டுகள் வழியாக மட்டுமே பயணிகள் ஏற அனுமதிக்கப்படுவார்கள்.

* பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

* ஒவ்வொரு முறை பேருந்து பயணம் முடியும்போதும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

* நாளை முதல் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில்  பழைய கட்டணமே வசூலிக்கப்படும்.

* தனியார் பேருந்துகளில் கட்டணம் குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும்.

* மண்டலங்களுக்கு உள்ளேயே மட்டுமே பேருந்து இயக்கப்படும்.

* ஒரு மண்டலத்தில் இருந்து இன்னொரு மண்டலத்தின் எல்லை வரை பேருந்துகள் இயக்கப்படும்.

* மண்டலம் விட்டு மண்டலங்களுக்கு பேருந்துகளில் பயணிக்க இ-பாஸ் அவசியம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. COVID-19: Tamil Nadu Government issues Transport Guidelines | Tamil Nadu News.