'இந்த' 4 மாவட்டங்கள் தவிர்த்து... தமிழகம் முழுவதும் 'பேருந்துகள்' இயக்கப்படும்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | May 31, 2020 01:02 PM

தமிழகம் முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பொது போக்குவரத்து குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்கள் 8 மண்டலங்களாக கீழ்க்கண்டவாறு பிரிக்கப்பட்டு இருக்கின்றன.

TN government allows partial resumption of public transport

மண்டலம் 1  : கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல்

மண்டலம் 2 : தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி

மண்டலம் 3: .விழுப்புரம், திருவண்ணாமலை, கடலுhர் மற்றும் கள்ளக்குறிச்சி

மண்டலம் 4 : நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி,அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை

மண்டலம் 5 : திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்

மண்டலம் 6:  தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி

மண்டலம் 7 : காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு

மண்டலம் 8 : சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி

இதில் மண்டலம் 7 மற்றும் மண்டலம் 8-ல் வரும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படாது. அதே நேரம் மீதமுள்ள அனைத்து மண்டலங்களிலும் 50% பேருந்துகள் இயக்கப்படும். பேருந்துகளில்  60 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதே நேரம் அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. TN government allows partial resumption of public transport | Tamil Nadu News.