'நோயாளிகளுக்கு தாயாக இருந்தவர்'.... 'மருத்துவர் சாந்தாவுக்கு முழு அரசு மரியாதை'... தமிழக அரசு அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jan 19, 2021 11:12 AM

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

chennai adayar doctor santha funeral with state honours cm eps details

அப்போலோ மருத்துவமனையில் இதயநோய் சம்பந்தமாக சிகிச்சை பெற்று வந்த, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர் சாந்தா, மூச்சுத் திணறல் காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 93.

மருத்துவர் சாந்தாவின் உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், "அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்" என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மருத்துவர் சாந்தாவின் இறப்பு, ஈடு செய்ய முடியாத பேரிழப்பு எனவும் முதல்வர் பழனிசாமி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai adayar doctor santha funeral with state honours cm eps details | Tamil Nadu News.