Kadaisi Vivasayi Others

தமிழக மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மாவட்டம் வாரியாக நடத்தப்பட்ட ஆய்வில்.. வெளிவந்துள்ள அல்டிமேட் தகவல்

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Feb 09, 2022 04:31 PM

கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் மக்களின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

87% increase in the immunity of the people in Tamil Nadu

திருமண நிச்சயதார்த்தம் நடக்க ரெடியா இருந்த நேரத்தில்.. வீட்டுக்கு மேல கேட்ட பயங்கர சத்தம்.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்

நோய் எதிர்ப்பு சக்தி:

கொரோனா நோய் பரவல் அச்சுறுத்தி வரும் சூழலில் நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. அதோடு, மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுவரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து ரத்தம் சார்ந்த தொற்று நோயியல் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இதன் படி, கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கட்டமாக செய்யப்பட்ட ஆய்வில் பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தி 32%மாகவும், 2-வது கட்டமாக 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் நோய் எதிர்ப்பு சக்தி 29%மாகவும், 3-வது கட்டமாக 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் நோய் எதிர்ப்பு சக்தி 70 சதவீதமாகவும் இருந்துள்ளது.

சுகாதார ஆய்வகங்களில் பரிசோதனை:

தற்போது 4-வது கட்டமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் பொதுமக்களின் நோய் எதிர்ப்பு 87%மாக அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது. சுமார் 32,245 பேரிடம் தலா 30 பேர் கொண்ட 1,076 குழுக்களாக பிரிந்து கிராமம், நகர்ப்புற பகுதிகளில் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மாநில பொது சுகாதார ஆய்வகங்களில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

87% increase in the immunity of the people in Tamil Nadu

கொரோனா தடுப்பூசி:

18 வயதுக்கு மேற்பட்டவர்களின்நோய் எதிர்ப்பு சக்தி 87 சதவீதமாக உள்ளது. 11 முதல் 18 வயதுக்குட்பட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி 68 சதவீதம் இருக்கிறது. ஆனால் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 27,324 பேரில் நோய் எதிர்ப்பு சக்தி 24,667 பேரிடம் (90 சதவீதம் ஆகும்) இருந்தது. தடுப்பூசி செலுத்தி கொள்ளாத 4,921 பேரில் 3,374 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக (69 சதவீதம்) இருந்தது.

சென்னையில் 88 சதவீத பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. மாவட்டம் வாரியாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் திருவாரூர் மாவட்டத்தில் 93 சதவீத பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. மற்ற மாவட்டங்களில் உள்ள மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி சதவீதம் வருமாறு:-

தென்காசி-92, பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, கன்னியாகுமரி, விருதுநகர்- 91, கடலூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, நாமக்கல், திண்டுக்கல், திருவள்ளூர்-88, நீலகிரி, அரியலூர், தூத்துக்குடி, ஈரோடு-87, தேனி, திருச்சி, திருப்பூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, வேலூர், கரூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், செங்கல்பட்டு-86, திருவண்ணாமலை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, கோவை, சேலம்-85, விழுப்புரம், தர்மபுரி-84, காஞ்சிபுரம்-83, திருப்பத்தூர்-82 சதவீதம் என அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'அந்த மாதிரி' படம் பாக்குறவங்களுக்கு செக்.. அவ்ளோ ஈசியா உள்ள போக முடியாது.. புதிய ரூல்ஸ் போட்ட நாடு

Tags : #TAMIL NADU #IMMUNITY #PEOPLE #INCREASE #நோய் எதிர்ப்பு சக்தி #கொரோனா நோய் #கொரோனா தடுப்பூசி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 87% increase in the immunity of the people in Tamil Nadu | Tamil Nadu News.