VIDEO: நாட்-அவுட் இல்ல 'அவுட்'.. இங்கி பிங்கி 'விளையாடிய' அம்பயர்.. 'கெட்ட' வார்த்தைகளால் திட்டித்தீர்த்த கேப்டன்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Nov 07, 2019 11:37 PM

இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி தற்போது ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்களை எடுத்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக சாஹல் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தார். வங்கதேச அணியில் மொகமது நைம் 36 ரன்கள் எடுத்தார்.

Rohit Sharma Abuses 3-rd umpire during 2-nd T20 match

தொடர்ந்து 2-வதாக பேட் செய்த இந்திய அணி ரோஹித் சர்மாவின் அதிரடியால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 இரு அணிகளும் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளன. முன்னதாக வங்கதேச அணி பேட்டிங் செய்தபோது 13-வது ஓவரில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பந்தை பிடித்து ஸ்டெம்பில் அடித்தார்.

இதில் வங்கதேச வீரர் சவும்யா அவுட் ஆனார். ஆனால் 3-வது அம்பயர் நாட்-அவுட் என தீர்ப்பு வழங்கினார். இதனால் மைதானத்தை விட்டு வெளியேறிய சவும்யா மீண்டும் உள்ளே வர ஆரம்பித்தார். தொடர்ந்து சில நொடிகளில் சவும்யா அவுட் என 3-வது அம்பயர் அறிவித்தார். இதைப்பார்த்த கேப்டன் ரோஹித் சர்மா கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.