'மொத்தக் கனவுக்கும் ஆப்பு வைத்த சிஎஸ்கே!'.. 'தொடரில் இருந்து' வெளியேறிய 'இன்னொரு' ஐபிஎல் அணி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Nov 02, 2020 03:09 PM

ஐபிஎல் 53வது லீக் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் சிஎஸ்கேவின் ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் டூ பிளசிஸ் ஆகியோரின் ஆட்டம் அணியை வெற்றிபெற செய்தது.

KXIP Out from Play off after CSK winning in the 53rd IPL2020 match

ஆனால் சென்னை அணியின் இந்த வெற்றியால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பிளே-ஆப் சுற்று கனவு தகர்ந்துள்ளது. கடந்த இரு போட்டிகளுக்கு முன்பே சிஎஸ்கே 12 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றிலிருந்து வெளியேறிய நிலையில், தொடர்ந்து 3 வெற்றிகளின் மூலம் சென்னை அணி தொடரிலிருந்து கவுரமாக வெளியேறியுள்ளது.

ஆனால் இந்த போட்டியின் தோல்வி மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பிளே-ஆப் கனவு தகர்ந்து அந்த அணியும் தொடரிலிருந்து வெளியேறுகிறது.  முதல் 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்ற அந்த அணி, பின்பு 5 போட்டிகளில் வென்றது.

KXIP Out from Play off after CSK winning in the 53rd IPL2020 match

ஆனால், நேற்றைய போட்டியின் தோல்வி அந்த அணியையும் 12 புள்ளிகளுடன் தொடரிலிருந்து வெளியேற வைத்தது. அணியின் தீபக் ஹுடா 32 பந்துகளில் 60 ரன்களை குவித்தும், அந்த முயற்சி வீணானது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. KXIP Out from Play off after CSK winning in the 53rd IPL2020 match | Sports News.