‘குடும்பத்துக்கு நேரம் செலவிட போறேன்’!.. திடீரென விலகும் சிஎஸ்கே வீரர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
![IPL 2021: CSK pacer Josh Hazlewood pulls out of the season IPL 2021: CSK pacer Josh Hazlewood pulls out of the season](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/ipl-2021-csk-pacer-josh-hazlewood-pulls-out-of-the-season.jpg)
இந்தியன் பிரீமியர் லீக்கின் 14-வது சீசன் ஏப்ரல் 9-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதனால் ஒவ்வொரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளன. இதற்கு அடுத்த நாள் (ஏப்ரல் 10-ம் தேதி) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகின்றன.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இடம்பிடித்த ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசில்வுட் (Josh Hazlewood) இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து cricket.com.au. பத்திரிக்கைக்கு ஜோஷ் ஹேசில்வுட் கூறியதாவது, ‘நான் கடந்த 10 மாதங்களாக வெவ்வேறு நேரங்களில் பஜோ-பபில் மற்றும் தனிமைப்படுத்தலில் இருக்கிறேன். அதனால் குடும்பத்துடன் சிறிது காலம் நேரத்தை செலவிட விரும்புகிறேன். குளிர்காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயனம் நீண்டதாக இருக்கும். வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடர் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ளது.
இதனை அடுத்து டி20 உலகக்கோப்பை, அதன்பின்னர் ஆஷஸ் தொடர் என 12 மாதங்கள் மிகப் பெரியதாக இருக்க உள்ளது. அதற்கு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயாரக விரும்புகிறேன். அதனால்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். இந்த இடைவெளி எனக்கு போதுமானதாக இருக்கும்’ என ஜோஷ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)