என்ன ஒரு தைரியம்! 'இறங்கி' வந்த கொல்கத்தா கேப்டன்... மறைமுகமாக 'தோனியை' சீண்டும் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Sep 24, 2020 12:03 AM

நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 195 ரன்கள் குவிக்க கொல்கத்தா அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்ததால் இலக்கை அந்த அணியால் எட்ட முடியவில்லை.

IPL 2020: Fans applause Dinesh Karthik\'s Bold Decision

இந்த நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்கை வைத்து ரசிகர்கள் சென்னை அணி கேப்டன் தோனியை சீண்டி வருகின்றனர். அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை கொல்கத்தா அணி இழக்க 3-வது இடத்தில் ஒன் டவுனாக அந்த அணியின் கேப்டன் தினேஷ் இறங்கினார். அவர் 30 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தாலும் தைரியமாக 3-வது இடத்தில் இறங்கிய அவரது முடிவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

IPL 2020: Fans applause Dinesh Karthik's Bold Decision

நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி கேப்டன் தோனி 7-வது இடத்தில் இறங்கினார். இதை வைத்துத்தான் தற்போது அவரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சீண்ட ஆரம்பித்துள்ளனர். பதிலுக்கு சென்னை அணி ரசிகர்களோ, எங்க 'தல'க்கு எப்போ எங்கே இறங்கணும்னு தெரியும் என, அவருக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர். 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IPL 2020: Fans applause Dinesh Karthik's Bold Decision | Sports News.