அந்த விஷயத்துல கோட்டை விட்ட தோனி?... திருப்பதி லட்டு போல கெடச்ச 'சான்ஸ' இப்படி மிஸ் பண்ணிட்டாரே... ரசிகர்கள் ஆதங்கம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Sep 23, 2020 12:40 AM

நேற்று நடைபெற்ற சென்னை-ராஜஸ்தான் இடையிலான போட்டியில் ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித் இருவரும் அதிரடியாக ஆடி பின்வரும் வீரர்களுக்கு வழிகாட்டி விட்டனர். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 216 ரன்கள் எடுத்தது.

IPL 2020: Rajasthan Royals beat Chennai Super Kings by 16 Runs

இந்த நிலையில் போட்டியின்போது ஸ்மித்தை வெளியே அனுப்ப கிடைத்த வாய்ப்பை தோனி மிஸ் செய்து விட்டது தெரிய வந்துள்ளது. 9-வது ஓவரை ஜடேஜா வீச அந்த ஓவரின் 2-வது பந்து பந்து பேட்டில் படாமல் ஸ்மித் கால் காப்பு (Bad) மீது பட்டது. இதையடுத்து எல்பிடபிள்யூ கேட்டு, ஜடேஜாவும், தோனியும் நடுவரிடம் முறையீடு செய்தனர். ஆனால் அவுட் இல்லை என்று நடுவர் கூறிவிட்டார்.

தொடர்ந்து டிஆர்எஸ் அப்பீல் செய்யலாமா? என நினைத்த தோனி பின்னர் அந்த முடிவை கைவிட்டு விட்டார். ஆனால் ரீபிளேயில் அந்த பந்து ஸ்டெம்ப் மீது படும் தூரத்தில் தான் சென்றது. DRS விஷயத்தில் வல்லவர் என பெயர் வாங்கிய தோனி நேற்றைய போட்டியில் கோட்டை விட்டுவிட்டார். ஒருவேளை தோனி அப்பீல் செய்திருந்தால் ஸ்மித் வெளியே சென்று ஆட்டத்தின் போக்கே மாறியிருக்கும்.

IPL 2020: Rajasthan Royals beat Chennai Super Kings by 16 Runs

ஏனெனில் அப்போது அவர் வெறும் 31 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். தொடர்ந்து விளையாடி அவர் 69 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. இதை தற்போது ரசிகர்கள் சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IPL 2020: Rajasthan Royals beat Chennai Super Kings by 16 Runs | Sports News.