IPL2020: ஆமாம்.. மொத்தம் '5 பேரு'.. அதிகாரப்பூர்வமாக 'அறிவித்த' சிஎஸ்கே!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Nov 14, 2019 07:12 PM

ஐபிஎல் அணிகளை பொறுத்தவரையில் வீரர்களை அணி மாற்றம் செய்வது, விற்பனை செய்வது ஆகியவை இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதனால் ஒவ்வொரு அணிகளும் அதிரடியாக வீரர்களை அணிமாற்றம் செய்து வருகின்றன. அதே நேரம் சிஎஸ்கே அணி அதுகுறித்து எந்தவொரு பரபரப்பும் இல்லாமல் இருந்தது.

IPL 2020: CSK set to release five players tomorrow

சென்னை அணி அமைதியாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் பலவிதங்களிலும் கிண்டல் செய்து வந்தனர். பதிலுக்கு சென்னை அணியும் தங்களை கலாய்த்து கொண்டனர். இந்த நிலையில், '' சென்னை அணியில் இருந்து 5 வீரர்களை நாளைக்கு விடுவிக்கிறோம்,'' என சென்னை அணி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

கடந்த சீசனில் சரியாக விளையாடாத மோஹித் சர்மா, கேதார் ஜாதவ், முரளி விஜய், சாம் பில்லிங்ஸ், கரண் ஷர்மா ஆகியோரை சிஎஸ்கே விடுவிக்கலாம் என கூறப்படுகிறது.

Tags : #CSK #CRICKET