என்ன மனுஷன்யா இவரு...! 'நான் இப்போ வீட்டுக்கு கெளம்பல...' 'தோனி எடுத்த முடிவு...' - என்ன காரணம்...?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Issac | May 06, 2021 03:38 PM

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தல தோனி அதிரடி முடிவை வெளியிட்டுள்ளார்.

Dhoni says board the flight domestic players go home

2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா வைரஸின் இரண்டாம் அலை காரணமாக கிரிக்கெட் தொடரை நிறுத்துவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்நிலையில் அனைத்து அணி வீரர்களும் சொந்த மாநிலங்களுக்கும், வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். ஆனால் சிஎஸ்கே அணியின் கேப்டன் தல தோனியோ தான் இப்போது ராஞ்சி செல்ல மாட்டேன் எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து சிஎஸ்கே உறுப்பினர் ஒருவர் ஆங்கில நாளேட்டில் பேட்டி அளிக்கும் போது கூறியதாவது, 'நான் கடைசியாக தான் விடுதியில் இருந்து ஊருக்கு கிளம்புவேன். முதலில் சிஎஸ்கே அணியின் வீரர்கள் அனைவரையும் சொந்த மாநிலங்களுக்கும், வெளிநாட்டுக்கும் அனுப்புங்கள்.

முதலில் வெளிநாட்டு வீரர்கள் பாதுகாப்புடன் வீடு திரும்ப வேண்டும் என தோனி கூறினார். அதோடு இந்திய வீரர்கள் பாதுகாப்பாக ஊர் திரும்ப வேண்டும் என்றார். அனைவரும் தங்கள் ஊர்களுக்கு பாதுகாப்பாக சென்ற பிறகு தான் ராஞ்சிக்கான விமானத்தை இன்று பிடிப்பதாக தெரிவித்தார் தோனி' எனக் கூறியுள்ளார்.

பொதுவாக தோனி கேப்டன் கூல்லாகவும், உலகின் மரியாதைக்குரிய கிரிக்கெட் வீரராகக் கருதப்பட்டு வந்தார். இந்த முறை தன் அணியின் சக வெளிநாட்டு, உள்நாட்டு வீரர்கள் பாதுகாப்பாக தங்கள் ஊர் போய் சேர்ந்த பிறகே தான் விமானத்தில் ஏறுவேன் என்று சொன்ன செய்தி மேலும் அவரின் மேலிருந்த மதிப்பை உயர்த்தியுள்ளது எனலாம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Dhoni says board the flight domestic players go home | Sports News.