VIDEO: சும்மா விட்டுருந்தா '1 ரன்னோட' போயிருக்கும்... இதுக்கா தம்பி டேபிள ஒடைச்சீங்க?... மரண கலாய் கலாய்க்கும் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Sep 25, 2020 09:51 PM

துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் சென்னை-டெல்லி அணிகள் மோதி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 175 ரன்களை குவித்தது. தற்போது 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணிக்கு முரளி விஜய், வாட்சன் இணைந்து தொடக்கம் கொடுத்துள்ளனர்.

CSK player Sam Curran gifts Rishabh Pant four runs

இந்த நிலையில் டெல்லி அணியின் பேட்டிங் செய்த போது சென்னை வீரர் சாம் கரண் செய்த செயல் தற்போது ரசிகர்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது. சாம் வீசிய 16-வது ஓவரின் முதல் பந்தை ரிஷப் பண்ட் எதிர்கொண்டார். பண்ட் அந்த பந்தை லேசாக தட்டிவிட சாம் அதைப்பிடித்து தோனியை நோக்கி வீசினார். ஆனால் பந்து தோனியை தாண்டி வேகமாக பவுண்டரிக்கு ஓடியது.

CSK player Sam Curran gifts Rishabh Pant four runs

மறுபுறம் பண்ட் ஓடி ஒரு ரன் எடுத்து விட்டார். ஆக அந்த ஒரே பந்தில் டெல்லி அணிக்கு 5 ரன்கள் கிடைத்து விட்டது. இதைத்தான் ரசிகர்கள் தற்போது கிண்டல் செய்து வருகின்றனர். சாம் சும்மா விட்டிருந்தால் பண்டும் ரன் எடுக்காமல் அடுத்த பந்தை எதிர்கொண்டிருப்பார். அதைவிட்டு விட்டு ஸ்டம்பிங் செய்ய சொல்லி பந்தை தோனியிடம் தூக்கிப்போட நினைத்து அந்த பந்து பவுண்டரிக்கு சென்று விட்டது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. CSK player Sam Curran gifts Rishabh Pant four runs | Sports News.