தனிமையில் இருந்த காதல் ஜோடி.. திடீர்ன்னு மயங்கி விழுந்த காதலன்.. போலீஸ் விசாரணையில் காதலி சொன்ன அதிர்ச்சி தகவல்

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Jul 06, 2022 08:20 PM

காதலியுடன் உடலுறவில் நபர் ஒருவர் ஈடுபட்டு வந்த போது, திடீரென காதலனுக்கு ஏற்பட்ட சம்பவம், பலரையும் அதிர்ச்சிக்குள் ஆக்கி உள்ளது.

young man fainted while alone in hotel with lover

Also Read | "இந்த ஆபீஸ் எங்க பாஸ் இருக்கு??.." - ஊழியர்களுக்கு நிறுவனம் கொடுத்த வேற மாறி 'சர்ப்ரைஸ்'..

நாக்பூர் பகுதியைச் சேர்ந்த அஜய் பர்தேகி என்பவருக்கு, மத்தியப்பிரதேசத்தின் சிந்த்வாடா என்னும் பகுதியை சேர்த்த செவிலியரான 23 வயது இளம்பெண்ணுடன் ஃபேஸ்புக் மூலம் நட்பு உருவாகி உள்ளது.

இருவரின் நட்பும், நாளாக நாளாக காதலாக மாறி இருந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்த இளைஞர்

தனது காதலியின் பெற்றோர்களிடம் தங்களின் காதல் விவகாரத்தை சொல்லி, சம்மதமும் வாங்கி உள்ளார் அஜய் பர்தேகி. தொடர்ந்து, தனது காதலியுடன் திருமணம் நடத்தி வைக்கவும் இருவரின் பெற்றோர்கள் க்ரீன் சிக்னல் காட்டி இருக்கிறார்கள். வரும் நாட்களில் இருவரும் திருமணம் செய்யவும் திட்டம் போட்டிருந்தனர்.

அப்படி ஒரு சூழ்நிலையில், நாக்பூரின் சனோர் என்னும் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில், அஜய் மற்றும் அவரது காதலி ஆகியோர் அறை எடுத்து தங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் அங்கே தனிமையில் இருந்த நிலையில், அரை மணி நேரத்தில் உள்ளே கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

தனது காதலன் அஜய் மூச்சு பேச்சு இல்லாமல் மயங்கி விழுந்ததைக் கண்டு உறைந்து போனார் காதலி. உடனடியாக, ஹோட்டலின் நிர்வாகத்திற்கும் இந்த தகவலை அவர் தெரிவிக்க, அஜயை அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

இதுபற்றி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் அஜய்யின் காதலியிடம் விசாரணையை மேற்கொண்டனர். தாங்கள் இருவரும் ஹோட்டல் அறையில் உடலுறவு மேற்கொண்டதாகவும், அந்த சமயத்தில் திடீரென அஜய் மயங்கி விழுந்ததாகவும் கூறி உள்ளார். தொடர்ந்து, அவர்கள் தங்கி இருந்த ஹோட்டல் அறையை பரிசோதித்த போது, போதை பொருள் அல்லது மாத்திரைகள் எதையும் அஜய் பயன்படுத்தவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவர் மற்றும் வெல்டிங் டெக்னீசியனாக இருந்த அஜய்க்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் இருந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், பிரேத பரிசோதனை அறிக்கையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதுகிறார்கள். இதனைத் தொடர்ந்து, விபத்தின் போது நடந்த மரண வழக்காகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அஜய்யின் ரத்த மாதிரிகளும் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உடலுறவின் போது, மாராடைப்பு ஏற்பட்டு இளைஞர் உயிரிழந்ததாக வெளியான சம்பவம், தற்போது பலரது மத்தியில் கடும் பதற்றத்தை உண்டு பண்ணி உள்ளது.

Also Read | "இந்த போலீஸ்'க்கு ஒரு பெரிய சல்யூட்டே போடலாம்.." வண்டியை இழுத்துட்டு போன முதியவர் மனச குளிர வெச்ச போலீஸ்.. வாழ்த்தித் தள்ளும் நெட்டிசன்கள்

Tags : #YOUNG MAN #HOTEL #LOVER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Young man fainted while alone in hotel with lover | India News.