Veetla Vishesham Others Page USA

"எப்போ தான் கல்யாணம் பண்ணிக்குவ?".. தகராறில் ஈடுபட்ட காதலி.. பயங்கர பிளான் போட்ட காதலன்.. பிளாஸ்டிக் பையால் வெளிச்சத்துக்கு வந்த உண்மை..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Jun 20, 2022 05:29 PM

டெல்லியில் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்திய காதலியை, காதலன் கொலை செய்த சம்பவம் டெல்லி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Woman hit by lover for insisting on marriage in Delhi

Also Read | டேக்-ஆஃப் ஆன கொஞ்ச நேரத்துல எஞ்சினில் சிக்கிய பறவை.. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.. ஒரே நாள்-ல 3 டைம் இப்படி ஆகிடுச்சு..!

கடந்த மே மாதம் 24 ஆம் தேதி, டெல்லியின் வசந்த் கஞ்ச் பகுதியில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறை அதிகாரிகள், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். சம்பவ இடத்தில் கண்டறியப்பட்ட தடயங்களை சேகரித்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே டெல்லி முழுவதிலும் உள்ள காவல் நிலையங்களில் காணாமல் போனவர்கள் பற்றிய புகார்களை ஆய்வு செய்தனர்.

இதனிடையே, சடலம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் கிடந்த ஒரு மகளிர் தையலகத்தின் பிளாஸ்டிக் பையை காவல்துறை கைப்பற்றியிருக்கிறது. அந்த பையில் இருந்த முகவரிக்கு சென்ற காவல்துறையினர் பெண் குறித்து விசாரணை நடத்தும்போது, பெண்ணின் குடும்பத்தினரை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

காதல்

இறந்துபோனது தங்களது பெண் தான் என அந்த குடும்பத்தினர் உறுதிப்படுத்தியதை தொடர்ந்து விசாரணயை துரிதப்படுத்தினர் காவல்துறையினர். அப்போதுதான் அப்பெண்ணுடைய காதலன் குறித்து போலீசாருக்கு தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து 36 வயதான அந்த ஆணை சுற்றி வளைத்த அதிகாரிகள் அவரிடத்தில் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, அந்த பெண் இறந்த அதே நாளில், இருவரும் சந்தித்ததாக கூறியுள்ளார் அவர்.

இதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அந்த நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Woman hit by lover for insisting on marriage in Delhi

கல்யாணம்

இறந்துபோன போன பெண்ணை தான் காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தி வந்ததால் வசந்த் கஞ்ச் பகுதிக்கு அழைத்துச் சென்று, அவரை தாக்கி கொலை செய்ததாகவும் அவர் காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார். சம்பவம் நடைபெற்ற அன்று தான் மதுபோதையில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில் அவர்மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

டெல்லியில் திருமணம் செய்துகொள்ளும்படி காதலி வற்புறுத்தியதால் காதலனே அவரை கொலை செய்த சம்பவ அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | "சாப்பாடு போட முடியுமா? முடியாதா?".. போதையில் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கணவருக்கு காலையில் காத்திருந்த ஷாக்..!

Tags : #DELHI #WOMAN #LOVER #HIT #MARRIAGE #திருமணம் #காதல்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman hit by lover for insisting on marriage in Delhi | India News.